Online Rummy: ஆன்லைன் ரம்மி தடை மசோதா கடந்து வந்த பாதை

தமிழக அரசு எடுத்த தீர்க்கமான முடிவின் காரணமாக ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை அமலுக்கு வந்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 10, 2023, 05:02 PM IST
  • ஆன்லைன் ரம்மி தடை மசோதா அமல்
  • தமிழத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடக்கூடாது
  • விளையாடுவோருக்கு அபராதம் மற்றும் சிறை
Online Rummy: ஆன்லைன் ரம்மி தடை மசோதா கடந்து வந்த பாதை title=

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒப்புதல்:

அக்டோபர் 19, 2022 அன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் கேம்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஆன்லைன் சூதாட்டத்தையும் தடுக்கும் மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 8 ஆம் தேதி விளக்கம் கேட்டு மாநில அரசுக்கு திருப்பி அனுப்பினார். மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் 2வது முறையாக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இன்று ஒப்புதல் அளித்துள்ளார். 

மேலும் படிக்க | Online Rummy Ban Bill: ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா கடந்து வந்த பாதை:

தமிழ்நாட்டில் இதுவரை 40-க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். இதனையடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது. இதனை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்தது.

மீண்டும் கடந்த ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசர சட்டம்  கொண்டு வரப்பட்டது. அந்த அவசர சட்டத்திற்கு கடந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். அதன்பிறகு அக்டோபர் 19 ஆம் தேதி சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு கையெழுத்திடாமல் ஆளுநர் காலம் தாழ்த்தினார். ஐந்து மாதம் கழித்து கடந்த 8 ஆம் தேதி ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். 

மேலும் படிக்க | ’கல்விட்டு எறியமாட்டோம் ஆனால்...’ஆளுநர் ஆர்என் ரவிக்கு துரைமுருகன் கடும் எச்சரிக்கை

அதன் பிறகு, மீண்டும் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவையில் தாக்கல் செய்தார். அப்பொழுது "மிகுந்த கனந்த இதயத்துடன் நின்றுகொண்டு உள்ளேன். இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர் என முதல்வர் தெரிவித்தார். இதனையடுத்து ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீது சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதத்தை அடுத்து, ஆன்லைன் சூதாட்டம் தடை சட்ட முன்வடிவு மசோதா, சபாநாயகரால் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மீண்டும் நிறைவேற்றப்பட்டது. 

தமிழக சட்டமன்றத்தில் 2வது முறையாக நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு இன்று ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சட்டப்பேரவையில் ஆளுநரை வெளுத்து வாங்கிய முக ஸ்டாலின் - முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News