மருத்துவமனையில் இருந்து 8 மாத கர்ப்பிணி மாயம் கடத்தப்பட்டாரா? தீவிர விசாரணை!

குழந்தைபேறு அறுவை சிகிச்சைக்காக  அம்பத்தூரில் உள்ள பிரபல ஸ்டேட் போர்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். திடீரென்று நேற்று மாலை மருத்துவமனையிலிருந்து ராஜலட்சுமி மாயமானார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 10, 2021, 08:48 AM IST
மருத்துவமனையில் இருந்து 8 மாத கர்ப்பிணி மாயம் கடத்தப்பட்டாரா? தீவிர விசாரணை! title=

சென்னை: ஆவடி அருகே 8 மாத கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் இருந்து கடத்தலா? அல்லது அறுவை சிகிச்சைக்கு பயந்து தப்பி ஓட்டமா? என தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான கர்ப்பிணி பெண்ணை திருமுல்லைவாயில் காவல்துறை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

சென்னை பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் இவருக்கும் ராஜலட்சுமி திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. தற்போது உதயகுமாரின் மனைவி ராஜலட்சுமி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவரது வயிற்றில் இரட்டை குழந்தைகள் உள்ளது. 

இந்நிலையில் குழந்தைபேறு அறுவை சிகிச்சைக்காக  அம்பத்தூரில் உள்ள பிரபல ஸ்டேட் போர்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். திடீரென்று நேற்று மாலை மருத்துவமனையிலிருந்து ராஜலட்சுமி மாயமானார்.

இன்று நடைபெற இருந்த பிரசவ அறுவை சிகிச்சைக்காக பயந்துகொண்டு தெரிந்தவர்களுடன் சென்றாரா அல்லது கடத்தப்பட்டாரா என்ற சந்தேகத்தில்  கணவர் உதயகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயில் போலீசார் வழக்கு பதிவு செய்து மருத்துவமனை நிர்வாகத்திடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ |  நான் யார் தெரியுமா? குடிபோதையில் சக போலீசாரிடமே ரகளை செய்த காவலர்

மருத்துவமனையிலிருந்து மாயமான ராஜலட்சுமி என்ற கர்ப்பிணி பெண்ணை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். மருத்துவமனையிலிருந்து கர்ப்பிணிப் பெண் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி அருகே 8 மாத கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் இருந்து கடத்தலா? அல்லது அறுவை சிகிச்சைக்கு பயந்து தப்பி ஓட்டமா? தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான கர்ப்பிணி பெண்ணை திருமுல்லைவாயில் காவல்துறை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

மருத்துவமனையிலிருந்து கர்ப்பிணிப் பெண் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ |  செல்பி மோகத்தால் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்; தேடும் பணி தீவிரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News