ப.சிதம்பரம் வீட்டில் வருமான வரி துறை சோதனை!!

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  

Last Updated : Jan 13, 2018, 11:54 AM IST
ப.சிதம்பரம் வீட்டில் வருமான வரி துறை சோதனை!! title=

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடந்து வருகிறது. சிபிஐ அதிகாரிகளும் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 8 மணியளவில் வருமான வரி துறையினரின் சோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த சோதனையில் 8 வருமான வரி துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ப.சிதம்பரத்திற்கு சொந்தமான காரைக்குடியில் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. அதேபோல் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமாக டில்லியில் உள்ள வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

2006-ம் ஆண்டில் மும்பையில் தொடங்கப்பட்ட ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அந்நிய நேரடி முதலீட்டுக்கான அனுமதியை சட்டவிரோதமாகப் பெற உதவியதாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஏற்கனவே வழக்குப்பதிவு செய்தது.

இதனால் கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு தப்பித்துவிடக் கூடாது என்பதால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் அவர் வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டது. 

ஆனால் உச்சநீதிமன்றம் சென்று வெளிநாடு செல்ல அனுமதி பெற்றார். இதனிடையே அமலாக்கத்துறை அவரிடம் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக ஜனவரி 11-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக சோதனை நடந்து வருவதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. இந்த சோதனையானது பிற்பகல் வரை தொடர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

Trending News