சசிகலாவுக்கு எதிராக ஆளுநர் மாளிகை முன்பு முழக்கமிட்ட தீபா ஆதரவாளர்கள் கைது

சசிகலா முதல் அமைச்சராக பதவியேற்க அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி தீபாவின் ஆதரவாளர்கள் ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சசிகலாவிற்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர். 

Last Updated : Feb 9, 2017, 04:50 PM IST
சசிகலாவுக்கு எதிராக ஆளுநர் மாளிகை முன்பு முழக்கமிட்ட தீபா ஆதரவாளர்கள் கைது title=

சென்னை: சசிகலா முதல் அமைச்சராக பதவியேற்க அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி தீபாவின் ஆதரவாளர்கள் ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சசிகலாவிற்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர். 

இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை களைந்து செல்லுமாறு காவல்துறையினர் வலியுறுத்தினர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே வித்யாசாகர் வருகையை முன்னிட்டு ஆளுநர் மாளிகை முன்பு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

Trending News