காந்தி ஜெயந்தி: தமிழக ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் மரியாதை!

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநர், முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

Last Updated : Oct 2, 2018, 11:10 AM IST
காந்தி ஜெயந்தி: தமிழக ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் மரியாதை! title=

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநர், முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி அடிகளின் சிலைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

Trending News