பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கியது

12 ஆம் வகுப்பு துணைத்தேர்வுகள் ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் நடைபெற உள்ளன  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 23, 2021, 10:32 AM IST
பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கியது  title=

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகள் ஜூலை 19 ஆம் தேதி வெளியிடப்பட்டன. கடந்த மே மாதம் பிளஸ் 2  பொதுத்தேர்வு நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா தொற்று அச்சம் காரணமாக பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் , மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி எனவும் தமிழக அரசு (TN Govt) அறிவித்தது.

அதன்படி நேற்று (ஜூலை-22) காலை 11 மணி முதல் மதிப்பெண்கள் பட்டியலை இணையதளங்களில் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனக்கூறி அதற்கான இணையதள பக்கத்தை ( http://www.dge.tn.gov.in, http://www.dge.tn.nic.in ) பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது.

ALSO READ: தமிழக பள்ளிக் கல்வித்துறை 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இந்நிலையில் பிளஸ் 2 (12th Exam Results) துணைத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இன்று முதல் வரும் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 

கடந்த 19ஆம் தேதி வெளியிடப்பட்ட பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்கள், துணைத்தேர்வு எழுதலாம். இத்தேர்வில் பங்கேற்க இன்று முதல் வரும் 27 வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத்துறை சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த துணைத்தேர்வுக்கு அனைத்து பாடத்தேர்வுகளையும் எழுதுவதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தற்போது எழுதவுள்ள தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களே இறுதியானது என்று  அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு மே மாதம் பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களும், துணைத் தேர்வு எழுத சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். சிறப்பு அனுமதி திட்டத்தின் மூலம் ஜூலை 28ஆம் தேதி ஆன்லைனில் சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும், அதற்கு கட்டணமாக 1,000 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 6ஆம் தேதிமுதல் 19ஆம் தேதிவரை நடைபெறும் என்றும் தெரிவித்திருக்கிறது. +2 பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் துணைத்தேர்வை எழுத விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும் தெரிவித்திருக்கிறது.

ALSO READ: Tamil Nadu: 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News