17 வயது பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்!

17 வயது பள்ளி மாணவியை 4 ஆண்டுகளாக லாட்ஜில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த 2 நண்பர்கள் சிக்கியுள்ளனர்.   

Last Updated : Nov 28, 2017, 02:19 PM IST
17 வயது பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்! title=

சவுகார்பேட்டை கிருஷ்ணமுதலியார் தெருவை சேர்ந்த மோனி மற்றும் வியாசர்பாடி பாலகிருஷ்ணன் தெருவை சேர்ந்த ரவீந்திரன் ஷர்மா ஆகிய இருவரும் சேர்ந்து 17 வயது மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

இவர்கள் இருவரும் கடந்த 4 வருடங்களாக சென்னையிலுள்ள ஒரு லாட்ஜில் வைத்து பலாத்காரம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோனி என்பவர் அந்த மாணவியிடம் தன்னுடைய காதலை வெளிபடுத்தியுள்ளார். முதலில் அந்த சிறுமி மறுத்துள்ளார். 

ஆனால், அந்த நபர் சினிமாவில் காட்டுவதை போல அந்த சிறுமியை பின்தொடர்ந்து காதல் செய்வதாக தொல்லை கொடுத்துள்ளார். அதன் பின் அந்த சிறுமியும், தன்னுடைய காதலை ஒப்புக்கொண்டுள்ளார். முதலில் சாதாரணமாக உல்லாசம் அனுபவித்து வந்த மோனி, சில நாட்கள் கழித்து உல்லாசத்தை வீடியோ எடுத்து அவருடைய நண்பருடன் சேர்ந்து ரசித்துள்ளார்.

பிறகு, இருவரும் சேர்ந்து அந்த வீடியோ காட்டி மிரட்டி தொடர்ந்து உல்லாசம் அனுபவித்துள்ளனர். இதனிடையே, 3 முறை கருவை கலைத்துள்ளனர்.  

சமீபத்தில் ரவீந்தர் வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இது தொடர்பாக தனது வீட்டாரிடம் அந்த சிறுமி தெரிவித்திருக்கிறார். இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் ரவீந்தரனின்  தந்தையிடம் முறையிட்டுள்ளனர். அவர்கள் ஏற்க மறுத்ததால் கடும் கோபமடைந்த சிறுமியின் தந்தை வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இதையடுத்து, போலீசார் ரவீந்தரணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக லாட்ஜ் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News