ரசிகர்களை வெகுவாக கவர்ந்த விராட்கோலியின் செயல்

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது 20 ஓவர் போட்டியில் விராட் கோலி போட்ட பஞ்சாபி நடனம் மைதானத்தில் இருந்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 10, 2022, 09:01 AM IST
  • விராட் கோலியின் வைரல் வீடியோ
  • மைதானத்தில் போட்ட பாங்கிரா நடனம்
  • உற்சாகமடைந்த இந்திய ரசிகர்கள்
ரசிகர்களை வெகுவாக கவர்ந்த விராட்கோலியின் செயல் title=

இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்திருக்கும் இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக 20 ஓவர் தொடரில் பங்கேற்றிருக்கிறது. முதல் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியிலும் 49 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. ரோகித் சர்மா கேப்டனாக இந்திய அணிக்கு பொறுப்பேற்ற பிறகு அவரது தலைமையில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் இந்திய அணி போடும் வெற்றி நடை தொடரந்து கொண்டே இருக்கிறது. இப்போட்டியில் விராட் கோலி பேட்டிங்கில் ஏமாற்றினாலும், பீல்டிங்கில் ஏமாற்றவில்லை. அவரின் பஞ்சாபி பாங்கிரா நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் படிக்க | டி20 உலகக்கோப்பை அணியில் விராட் கோலியை கழட்டிவிட பிசிசிஐ முடிவு?

எட்பஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவிந்தது. கேப்டன் ரோகித் சர்மா 31 ரன்கள் எடுக்க, இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அதிரடியாக விளையாடி 46 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய கிறிஸ் ஜோர்டன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரிச்சர்ட் கிளேசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி, முதல் போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பியது. ஐபிஎல் போட்டிகளில் அதிரடியில் ஜொலித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர், லிவிங்ஸ்டோன் உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறி பெரும் ஏமாற்றம் கொடுத்தனர். இதனால் 17 ஓவரில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 121 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. 

இது ஒருபுறம் இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், விராட் கோலியின் பாங்கிரா நடனம் அவர்களை ஆர்பரிக்க வைத்தது. ஓவர்களுக்கு இடையில் ரசிகர்களை வாசித்த பஞ்சாபி இசைக்கு ஏற்ப விராட் கோலி நடனமாடியதைப் பார்த்து ரசிகர்கள் குதூகலமடைந்தனர். பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை என்றால் என்ன?, பாங்கிரா நடனத்தால் ரசிகர்களை மகிழ்வித்துவிட்டீர்களே கோலி! என அவருக்கு ஆதரவாக இணையத்தில் கமெண்டுகள் பறக்கின்றன.

மேலும் படிக்க | இதுவரை யாரும் செய்திராத சரித்திர சாதனை புரிந்த ரோஹித் சர்மா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News