தோனியின் திடீர் அறிவிப்பு... கேப்டன்ஸியில் இருந்து விலகலா? - என்ன விஷயம்?

MS Dhoni: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ஐபிஎல் தொடரை முன்னிட்டு பேஸ்புக்கில் திடீர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Mar 4, 2024, 08:40 PM IST
  • மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்குகிறது.
  • முதல் போட்டியில் சிஎஸ்கே - ஆர்சிபி மோதல்.
  • நடப்பு சாம்பியன் சிஎஸ்கே 6ஆவது கோப்பையை பெற போராடும்.
தோனியின் திடீர் அறிவிப்பு... கேப்டன்ஸியில் இருந்து விலகலா? - என்ன விஷயம்? title=

Chennai Super Kings, MS Dhoni: 17ஆவது ஐபிஎல் சீசன் (IPL 2024) தொடங்குவதற்கு இன்னும் சில நாள்களே உள்ளன. தேர்தல் சீசனும் வர உள்ள நிலையில், முதற்கட்ட போட்டிகளின் அட்டவணை மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் தொடங்குகிறது. இதில் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. பல முக்கிய நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. 

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி வரும் மார்ச் 7ஆம் தேதி தொடங்க உள்ளது. ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டியும் மார்ச் 10ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிகள் முடிவடைந்த உடன் ஒட்டுமொத்த வீரர்களும் தங்கள் அணியின் பயிற்சி முகாமில் இணைவார்கள் எனலாம். ஏற்கெனவே பல வீரர்கள் அந்தெந்த அணியின் பயிற்சி முகாமில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஐபிஎல் மீதான எதிர்பார்ப்பு

இந்த ஐபிஎல் தொடரில் ஏற்கெனவே பல சுவாரஸ்யங்களை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். முதல் போட்டியே சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இடையில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. ஐபிஎல் ஏலம் முதல் பல பரபரப்பான காட்சிகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் நிலவியது. 

ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டரான கேம்ரூன் கிரீனை பெங்களூரு அணிக்கு டிரேட் செய்த மும்பை அணி, குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மீண்டும் அணிக்குள் எடுத்துள்ளது. ஹர்திக் பாண்டியாவை குஜராத்திடம் இருந்து வாங்கியது மட்டுமின்றி அந்த அணியின் கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியாவை அறிவித்தது மும்பை. அதாவது, ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவுக்கு பொறுப்பை ஒப்படைத்தது.

மேலும் படிக்க | ரோகித் சர்மாவை வீழ்த்த பிளான் போட்ட 2 மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்..!

தோனியின் கடைசி ஐபிஎல்?

இது அணிக்குள்ளும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் புயலையே கிளப்பியது எனலாம். சூர்யகுமார் யாதவ், பும்ரா ஆகியோர் இதுசார்ந்த அதிருப்தியை தெரிவித்ததாக கூறப்பட்ட நிலையில், இளம் வீரர் இஷான் கிஷன் ரோஹித்தை விடுத்து ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதாகவும் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இப்படியான சூழலில்தான் கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

அதேபோல், இதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் (MS Dhoni) கடைசி ஐபிஎல் தொடர் என்றும் கூறப்படுகிறது. வருடாவருடம் இது கூறப்படுவதுதான் என்றாலும், இந்த முறை இது சாத்தியமாகும் வாய்ப்புகள் அதிகமிருப்பதாக கூறப்படுகிறது. எனவே, தோனி விளையாடும் போட்டிகளை எதிர்பார்த்து கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருப்பில் உள்ளனர். 

இந்நிலையில், தோனி இன்று மாலை தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ள பதிவு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது. அந்த பதிவில் தோனி,"புதிய சீசனுக்காகவும், புதிய 'பொறுப்பாகவும்' காத்திருக்கிறேன். தொடர்ந்திருங்கள்" என பதிவிட்டுள்ளார். அதாவது, புதிய பொறுப்பு (New Roles) என்பதை மேற்கொள்கட்டி குறிப்பிட்டுள்ள தோனியின் பதிவால் ரசிகர்கள் ஆழ்ந்த சிந்தனைக்கே சென்றுள்ளனர். 

தோனியின் பேஸ்புக் பதிவு:

ஒருவேளை, 2022ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் தோனி திடீரென அறிவித்ததுபோல், தற்போதும் கேப்டன்ஸி பொறுப்பில் இருந்து விலகிவிடுவாரோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. குறிப்பாக, Impact Player விதி இருப்பதால், அதில் கேப்டனாக உள்ளவர்களை மட்டும் மாற்ற முடியாது. எனவே, தோனி கேப்டனாக இல்லாமல், வெறும் பேட்டிங் செய்வதற்கும், முக்கிய கட்டத்தில் மட்டும் பீல்டிங்கில் செய்வதற்கும் முடிவெடுத்திருப்பாரோ என்ற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. 

கடந்த சீசனில் சென்னை அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த தோனி, அப்போதே கால் முட்டியில் பலத்த காயத்தால் அவதிப்பட்டு வந்தார். தொடர்ந்து, அறுவை சிகிச்சை செய்து அதில் இருந்து மீண்டு வந்துள்ள தோனி, தனது உடல்நலனை கருத்தில்கொண்டும் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், தோனி எப்போது என்ன முடிவை அறிவிப்பார் என்பது யாருக்கும் தெரியாது என்பதே நிதர்சனம்.

மேலும் படிக்க | சன்ரைசர்ஸ் அணிக்கு புது கேப்டன் அறிவிப்பு - மார்கிரம் நீக்கம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News