இந்த 3 ராசிகளின் தலைவிதி இன்று முதல் மாறுகிறது, உஷாரா இருக்கணும்

Mercury Transit 2022: இன்று புதன் கிரகம் அதன் சொந்த ராசியான கன்னியில் நுழைந்துள்ளது. புதன் தவிர, சூரியன், சனி போன்ற முக்கியமான கிரகங்களும் இந்த நேரத்தில் தங்கள் சொந்த ராசியில் உள்ளன. இது 3 ராசிக்காரர்களுக்கு சாதகமான விளைவை ஏற்படுத்தும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 22, 2022, 08:27 AM IST
  • 3 ராசிகளின் பொன்னான நாட்கள் தொடங்கியது
  • கிரக ராசி மாற்றம் 2022
  • புதன் பெயர்ச்சி 2022
இந்த 3 ராசிகளின் தலைவிதி இன்று முதல் மாறுகிறது, உஷாரா இருக்கணும் title=

புதன் பெயர்ச்சி 2022, சூரியன் பெயர்ச்சி 2022, சனி பெயர்ச்சி 2022 பலன்: இன்று புதன் கிரகம் அதன் சொந்த ராசியான கன்னி ராசியில் நுழைந்துவிட்டது, பியாக்கு புதன் அக்டோபர் 2ம் தேதி மீண்டும் கன்னி ராசியிலேயே இயல்பு நிலையில் நேர்கதியில் பயணிக்க உள்ளார். அதேபோல் அக்டோபர் 26ம் தேதி புதன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆவார். இதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு, கிரகங்களின் ராஜாவான சூரியன், ராசி மாறி சிம்ம ராசியில் நுழைந்தார். இது தவிர, நீதியின் கடவுளான சனியும் இந்த நேரத்தில் மகர ராசியில் இருக்கிறார். இப்படியாக 3 முக்கிய கிரகங்கள் சொந்த ராசிகளில் இருப்பது அபூர்வ கிரக நிலையை உருவாக்கி வருகிறது. எனவே ஜோதிட சாஸ்திரப்படி சூரியன், புதன், சனி ஆகிய கிரகங்கள் தங்கள் சொந்த ராசிகளில் ஒன்றாக இருப்பது சிறப்பு மற்றும் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலனைத் தரும். அவை எந்த ராசிகள் என்பதை இங்கே விரிவாக தெரிந்துக்கொள்வோம்.

புதன்-சூரியன்-சனி கிரகம் சொந்த ராசியில் பயணம்: இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

மேலும் படிக்க | சிம்மத்தின் இணையும் சூரியன் - சுக்கிரன்; இந்த ‘4’ ராசிகளின் பொற்காலம் ஆரம்பம்! 

மிதுன ராசி: இந்த கிரக நிலைகள் (புதன்-சூரியன்-சனி) மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். சிம்மத்தில் சூரியன் தங்கும் காலத்தில் தொழில், வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். அதேபோல் இந்த ராசிக்காரர்களின் வீரமும் தன்னம்பிக்கையும் அதிகமாகவே இருக்கும். அரசியலில் ஈடுபடுபவர்கள் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள். பதவி உயர்வு மற்றும் மரியாதை பெறுவீர்கள். பண வரவு சாதகமாக இருக்கும். இருப்பினும், உடல்நிலத்தில் மோசமான பாதிப்பு ஏற்படலாம்.

கடக ராசி: கடக ராசிக்காரர்களுக்கு சூரியன், சனி, புதன் ஆகிய கிரகங்களின் நிலை நல்ல சிறப்பான பலனை ஏற்படுத்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் சம்பளம் கூடும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். பதவி உயர்வு பெறலாம். நீதிமன்றத்தில் சிக்கிய வழக்குகள் தீர்வுக்கு வரும். முதலீடு செய்வதற்கும் சேமிப்பதற்கும் இது ஒரு நல்ல நேரம்.

துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியன், புதன், சனியின் தற்போதைய நிலை சுபயோகமாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள். வெளியூர் பயணம் திட்டமிட்டப்படி நிறைவேறும். வெளியூர் சம்பந்தமான வேலை செய்பவர்கள் ஆதாயம் அடைவார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளின் பெரிய ஒப்பந்தங்கள் முடிவடையும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | ஆகஸ்டில் கிரகங்களின் ராசி மாற்றத்தால் இந்த ராசிகளுக்கு எக்கச்சக்க ஏற்றம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News