IND vs PAK : டாஸ் காயினை பாக்கெட்டில் வைத்துக் கொண்ட ரோகித் சர்மா..! ஷாக்கான பாபர் அசாம்

இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் டாஸ் போட வந்த கேப்டன் ரோகித் சர்மா, காயினை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு அங்கும் இங்கும் தேடியது நகைப்பை ஏற்படுத்தியது. 

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா -பாகிஸ்தான் போட்டி நியூயார்க் நகரில் உள்ள  நசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

1 /6

இப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் அணியில் விக்கெட் கீப்பர் ஆலம் கான் நீக்கப்பட்டு பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இமாத் வாசிம் சேர்க்கப்பட்டார். 

2 /6

அப்போது டாஸ் போடுமாறு அழைத்ததும், ரோகித் காயினை பாக்கெட்டில் வைத்ததை மறந்து அங்கிருந்தவர்களிடம் காயினை கொடுக்குமாறு கேட்டார். உங்க பாக்கெட்டில் தான் இருக்கிறது என பாபர் சொல்லி வயிறு குலுங்க சிரிக்க, ரோகித்தும் சிரித்தவாறே காயினை எடுத்து டாஸ் போட்டார். 

3 /6

அப்போது டாஸ் போடுமாறு அழைத்ததும், ரோகித் காயினை பாக்கெட்டில் வைத்ததை மறந்து அங்கிருந்தவர்களிடம் காயினை கொடுக்குமாறு கேட்டார். உங்க பாக்கெட்டில் தான் இருக்கிறது என பாபர் சொல்லி வயிறு குலுங்க சிரிக்க, ரோகித்தும் சிரித்தவாறே காயினை எடுத்து டாஸ் போட்டார். 

4 /6

இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் இறங்கிய நிலையில், திடீரென மழை பெய்ய தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன்பே மழை பெய்ததால் டாஸ் போடுவதே தாமதமானது.

5 /6

இருப்பினும் போட்டி தொடங்கிய நிலையில், இந்திய அணி ஒரு ஓவர் முடிவில் 8 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மீண்டும் மழை குறுக்கிட, போட்டி 15 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.

6 /6

பின்னர் ஆட்டம் தொடங்கியதும் ரோகித் சர்மா, விராட் கோலி போட்டியை தொடங்கினர். மேற்கொண்டு ஒரே ஒரு பவுண்டரி மட்டும் அடித்த விராட் கோலி ஆப்சைடில் கேட்ச் என்ற முறையில் விக்கெட்டை பறிகொடுத்து அவுட்டானார்.