கேது பெயர்ச்சி 2022: இந்த ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான செல்வம் கிடைக்கும்

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறது. இந்த ராசி மாற்றம் மனித வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும், இந்த மாற்றம் சிலருக்கு அதிர்ஷ்டமாகவும் சிலருக்கு துரதிர்ஷ்டமாகவும் இருக்கலாம். கேது ஏப்ரல் 12, 2022 அன்று துலாம் ராசிக்குள் நுழைந்தார். தற்போது 2023 வரை இந்த ராசியில் இருப்பார். அதன்படி கேதுவின் இந்த ராசி மாற்றம் மூன்று ராசிக்காரர்களுக்கும் மிகவும் நல்ல பலனை தரும். அவை எந்த ராசிக்காரர்கள் என்பதை பார்ப்போம்.

1 /3

மகரம்: இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பல இடங்களில் இருந்து பணம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் பெறலாம். இந்த நேரத்தில் திடீர் நிதி ஆதாயமும் கிடைக்கும். தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் புதிய ஒப்பந்தங்களை முடிப்பீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. நீண்ட நாட்களாக தேக்க நிலையில் இருந்த பணம் கிடைக்கும்.

2 /3

கடகம்: புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. நன்றாக வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். காதல் வெற்றி உண்டாகும். ன் முழு ஆதரவும் கிடைக்கும். தாய் மூலம் பணம் வரும். இடமாற்றம் சாத்தியம்.சொத்து, வாகனம் போன்றவை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

3 /3

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். மேலும் நீங்கள் எந்த செயலிலும் வெற்றி பெறுவீர்கள். வேலை தொடர்பாக பயணம் செய்யலாம். இந்த பயணங்கள் எதிர்காலத்தில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறலாம். உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதும், போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதும் எளிது. ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டவர்களுக்கு இந்த நேரத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும்.