கேரளாவின் ‘அத்திப்பட்டி’ வரைபடத்தில் இருந்தே காணாமல் போனதாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்

Kerala landslide : கேரளாவில் வயநாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் பூஞ்சேரி மட்டம் என்ற பகுதியே வரைபடத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.

Kerala landslide Update : கேரளாவில் வயநாட்டில் வரலாறு காணாத நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 400க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆறு நாட்களைக் கடந்தும் காணாமல் போனவர்களை தேடும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் கேரளாவின் அத்திப்பட்டியாகியுள்ளது பூஞ்சேரி மட்டம்.

 

1 /12

வரலாறு காணாத நிலச்சரிவு என்னும் பெருந்துயரில் சிக்கி தவிர்க்கிறது கேரளாவின் வயநாடு பகுதி. மண்ணோடு மண்ணாக மக்கள் புதைந்துபோய் இருக்கும் இந்த கோரச்சம்பவம், உணர்ச்சியுள்ள மனிதர்கள் எல்லோரின் மனதையும் கசக்கி பிழிந்துவிட்டது.

2 /12

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டக்கை, மெப்படி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 30-ம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.

3 /12

7 கிலோ மீட்டர் வரை ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் சிக்கி 500க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக தரைமட்டமாகின. பல கிராமங்கள் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணில் புதைந்து போய்விட்டன. 

4 /12

வீடு, கார் உள்ளிட்ட ஆசை ஆசையாக மக்கள் வாங்கி வைத்திருந்த பொருட்களும், வீட்டு உரிமையாளர்களுடனே மண்ணில் புதைந்ததுவிட்டன. ஆறு நாட்களுக்கும் மேலாக தொடரும் மீட்பு பணியில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

5 /12

பலரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படாமல் இருக்கின்றன. அத்துடன் சிலரின் உடல்கள் இன்னும் கிடைக்கவே இல்லை. மண்ணோடு மண்ணாக புதைந்துவிட்டதால் அவர்களின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.

6 /12

நிலச்சரிவு ஏற்பட்ட சமயத்தில் சிலரின் உடல்கள் எல்லாம் ஆற்றில் 90 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் கிடைந்த துயரமும் அரங்கேறியது. இதனால் ஆற்றின் வழிநெடுகிலும் இருக்கும் பாறைகளின் இடுக்குளில் உடல்கள் ஏதும் சிக்கியிருக்கிறதா எனவும் தேடப்பட்டு வருகிறது.

7 /12

சூரல்மலையில் ஒரு பெண்ணின் கை மட்டுமே கிடைத்த நிலையில், அதில் அவர் அணிந்திருந்த மோதிரத்தை வைத்து அப்பெண்ணின் அடையாளம் காணப்பட்டு, அவருக்கு இறுதிச்சடங்கும் குடும்பத்தினர் செய்திருக்கின்றனர். அப்போது குடும்பத்தினரின் கதறல் மனதை கசக்கி பிழிவதுபோல் இருந்தது.

8 /12

எங்கு பார்த்தாலும் பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர், உறவினர்களை இழந்த குடும்பத்தினரின் மரண ஓலங்கள் வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இன்னும் குறையவில்லை.

9 /12

மண்ணுக்குள்ளே புதைந்திருந்தாலும் ஏதாவதொரு வாய்ப்பில் உயிர்பிழைத்திருக்க மாட்டார்களா? என்ற ஏக்கம் அங்கு இருக்கும் மக்களின் கண்களில் தெரிகிறது. இதற்கு வலுசேர்க்கும் விதமாக மூன்று நாட்களுக்குப் பிறகெல்லாம் ஒரு குடும்பத்தினர் உயிரோடு மீட்கப்பட்டிருக்கின்றனர்.

10 /12

தேசிய மீட்பு படையினரும், தன்னார்வலர்களும் தொடர்ச்சியாக காணமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் தான் பூஞ்சேரி மட்டம் என்கிற பகுதியே நிலச்சரிவில் முற்றிலும் காணமல் போய்விட்டது என்ற அதிர்ச்சி தகவலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

11 /12

மேப்பில் அப்பகுதியே இல்லை என தெரிவித்திருக்கும் அதிகாரிகள், அந்த கிராமத்தையொட்டி இருக்கும் பகுதிகளில் இனி மக்கள் வாழ்வதற்கு அனுமதி கொடுக்கப்படாது என்றும் கூறியுள்ளனர்.

12 /12

கேரளாவின் அத்திப்பட்டியாக மாறியிருக்கும் பூஞ்சேரி மட்டம், வயநாடு நிலச்சரிவு என்ற கோரதாண்டவத்தில் காணாமல்போன கரும்புள்ளியாக மாறியுள்ளது.