குறைந்த சம்பளத்திலும் பணத்தை திட்டமிட்டு சேமிப்பது எப்படி!

தற்போது பணவீக்கம் அதிகரித்து மக்களின் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் மக்கள் திணறும் நிலை உள்ளது. மாதத்தின் 20 நாட்கள் ஆன உடனேயே கையில் உள்ள பணம் கரைந்து போய், கடன் வாங்கும் நிலை ஏற்படுகிறது. 

1 /5

மாதச் சம்பளம்: இன்றைய காலகட்டத்தில், தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி அதிகரித்து வருவதால், செலவுகளை ஈடுகட்ட முடியாமல் மக்கள் திணறுகின்றனர். இது போன்ற சூழ்நிலையில், மக்கள் தங்கள் சம்பளம் கிடைத்த உடன், திட்டமிட்டு சில நடவடிக்கைகளை மேற்கொண்டால், பிரச்சனையை சமாளிக்கலாம். 

2 /5

உண்மையில், இன்றைய காலகட்டத்தில் மக்களால் அதிக அளவில் சேமிக்க முடியவில்லை. முதலீடுகள் எதுவும் செய்ய முடியாத நிலை தான் உள்ளது. 

3 /5

மாதத்தில் கிடைக்கும் சம்பளத்தில், செலவுகளைச் செய்துவிட்டு பிறகு முதலீடு செய்ய வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். இருப்பினும், திட்டமிட்டு முதலீடு செய்தால்  குறைந்த சம்பளத்திலும் முதலீடு செய்யலாம்.

4 /5

சம்பளம் வந்தவுடன் முதலில் சேமித்து முதலீடு செய்ய குறிப்பிட்ட தொகையை பிரித்து விட வேண்டும். அதன் பிறகே, செலவுகளை சமாளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீங்கள் இதைச் செய்யாவிட்டால், சம்பளம் முழுவதுமாக காலியாவதோடு, பின்னர் சேமிப்போ அல்லது முதலீடோ செய்ய முடியாத நிலை ஏற்படும்.

5 /5

சம்பளம் வந்தவுடனேயே சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கு முன்னுரிமை கொடுப்பது தேவையற்ற செலவுகளையும் கட்டுப்படுத்தும். இதன் மூலம், மாதம் முழுவதும் எந்தெந்தச் செலவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும், அனாவசிய செலவுகள் என்ன என்பது நமக்கு புரியும். அத்தகைய சூழ்நிலையில், சம்பளம் வந்தவுடன், உடனடி சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.