IND vs AUS: பேட்டிங் சொர்கபூமி பெங்களூரிலேயே தடுமாறிய இந்திய அணி - 161 எடுத்தால் ஆஸி வெற்றி.!

பெங்களுரில் நடைபெற்ற 5வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 160 ரன்கள் எடுத்தது.

 

1 /8

இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5வது 20 ஓவர் போட்டி பெங்களுரில் நடைபெற்றது. இதில் டாஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூவேட் பேட்டிங் தேர்வு செய்தார்.   

2 /8

இந்த தொடரில் மட்டும் அவர் நான்காவது முறையாக டாஸ் வெற்றி பெற்று பவுலிங் தேர்வு செய்திருக்கிறார்.   

3 /8

இதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது.   

4 /8

அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் 37 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். அவர் களத்தில் இருந்ததாலேயே இந்திய அணி கவுரமான ஸ்கோர் எடுக்க முடிந்தது.   

5 /8

ஒரு கட்டத்தில் இந்திய அணி 55 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் 6 ரன்களுக்கு அவுட்டானார்.   

6 /8

பின்வரிசையில் இறங்கிய ஜிதேஷ் சர்மா 24 ரன்களும், அக்சர் படேல் 31 ரன்களும் எடுத்தனர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரியளவில் யாரும் ஜொலிக்கவில்லை.  

7 /8

எதிர்பார்த்த அளவுக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடியிருந்தால் 200 ரன்கள் அடித்திருக்கலாம். ஆனால் பிட்ச் ஸ்லோவாக இருப்பதாக கமெண்டரியில் இருந்த முன்னாள் வீரர்கள் தெரிவித்தனர்.   

8 /8

சிறப்பாக பந்துவீசி இந்திய அணியை 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய ஆஸ்திரேலிய அணி சேஸிங் இறங்கியது.