ஜிகர்தண்டா முதல் பாகத்தில் நடிக்க வேண்டியது நான் தான்: ராகவா லாரன்ஸ்!

Jigarthanda DoubleX: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படம் தீபாவளி தினத்தில் வெளியாக உள்ளது.

 

1 /6

ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படம் இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாக உள்ளது.  படத்தின் மீது அதிகளவில் எதிர்பார்ப்பு உள்ளது.  

2 /6

1970களின் பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தில், ராகவா லாரன்ஸ் பாண்டியா என்ற இரக்கமற்ற கேங்க்ஸ்டராக நடிக்கிறார். இன்னொரு பக்கம் எஸ்.ஜே.சூர்யா இயக்குனராக நடிக்கிறார்.   

3 /6

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.  இதில் கலந்து கொண்ட ராகவா லாரன்ஸ் முக்கிய தகவலை வழங்கி உள்ளார்.  

4 /6

ஜிகர்தண்டா முதல் பாகத்தில் அசால்ட் சேது கேரக்டரில் நடிக்க வேண்டியது நான் தான். படம் பார்த்து ஒரு நாள் முழுவதும் வருத்தப்பட்டேன்.  

5 /6

ஆனால் இப்போது மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன். ​​20 கோடி படத்தில் நடிக்காமல், 100 கோடி படத்தில் நடித்து இருக்கிறேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.  

6 /6

ஹிட் படங்களை யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம், ஆனால் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் என்னை முற்றிலும் வித்தியாசமாக இந்த படத்தில் காட்டியுள்ளார்.