இந்து விரோத பதிவு... உலகக் கோப்பைக்கு இந்தியா வந்த தொகுப்பாளர் பாகிஸ்தான் திரும்பினார்!

Zainab Abbas:நடப்பு உலகக் கோப்பை தொடருக்காக இந்தியா வந்த தொலைக்காட்சி தொகுப்பாளினியும், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவருமான ஜைனப் அப்பாஸ் தற்போது நாடு திரும்பியுள்ளார். 

  • Oct 09, 2023, 19:51 PM IST

Zainab Abbas: ஜைனப் அப்பாஸ் பாகிஸ்தானுக்கே திரும்பிய பின்னணி குறித்தும், ஐசிசி அளித்த பதில் குறித்தும் இங்கு காணலாம். 

 

 


 

1 /7

ஜைனப் அப்பாஸ் பாகிஸ்தான் பிரபலமான விளையாட்டு சார்ந்த தொகுப்பாளர் ஆவார். இந்தியாவிலும் இவருக்கு ரசிகர்கள் அதிகம். 

2 /7

ஜைனப் அப்பாஸை புகழாத இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிக மிக குறைவு. தொலைக்காட்சி தொகுப்பாளரான இவர் ஒப்பனை கலைஞரும் ஆவார். 

3 /7

பாகிஸ்தானில் மிக மிக பிரபலமான இவருக்கு இன்ஸ்டாகிராமில் 8 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்ஸ் உள்ளனர். இவர் இங்கிலாந்தில் வார்விக் பல்கலைக்கழகத்தில்  MBA பட்டப்படிப்பு படித்துள்ளார். 

4 /7

இவர் 1988ஆம் ஆண்டு பிப். 14ஆம் தேதி பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்தவர். இவரின் தந்தை அந்நாட்டில் முதல்தர கிரிக்கெட் வீரராக இருந்துள்ளார். இவரின் தாயார் பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினராவார்.   

5 /7

2019இல் ஜைனப் அப்பாஸ் ஐசிசி உலகக் கோப்பையில் முதல் பாகிஸ்தானிய பெண் தொகுப்பாளராக உருவெடுத்தார். 

6 /7

ஜைனப் அப்பாஸ் 2023 உலகக் கோப்பைக்காக இந்தியா வந்திருந்தார். இவர் இந்து-விரோதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

7 /7

ஆனால், இதுகுறித்து ஐசிசி பதிலளித்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் நாடு திரும்பினார் என கூறியுள்ளது.