PF சந்தாதாரர்களே... உங்கள் கணக்கில் விரைவில் வட்டியை வரவு வைக்க தயாராகிறது EPFO!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. வருங்கால வைப்பு நிதி அமைப்பு, விரைவில் PF கணக்கில், அதற்கான வட்டியை டெபாசிட் செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் உள்ள, 7 கோடி PF சந்தாதாரர்கள் இதனால் பலன் அடைவார்கள். சமீபத்தில் EPFO வட்டி விகிதத்தை உணர்த்தியது என்பது அனைவரும் அறிந்ததே

1 /6

நீண்ட நாளாக நல்ல செய்தி வர காத்திருக்கும், பிஎப் சந்தாதாரர்களுக்கு, மகிழ்ச்சி அளிக்கும் வகையில், வட்டியை கணக்கில் வரவு வைப்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

2 /6

பிஎஃப் கணக்கில் இதுவரை 8.15% வட்டி கொடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, 2023-24 ஆம் ஆண்டிற்கான வட்டி விகிதம் 8.25 % என்ற அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

3 /6

EPFO இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை என்றாலும், மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில், பிஎஃப் கணக்கில் வட்டியை டெபாசிட் செய்யும் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.  

4 /6

மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பிறகு, பிஎப் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும், வட்டி தொகை வரவு வைக்கப்படும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

5 /6

உங்கள் EPFO கணக்கில் உள்ள தொகையை சரிபார்த்து, அறிந்து கொள்ள டோல் ப்ரீ எண்ணான 996604425 என்ற எண்ணுக்கு, பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து மிஸ்டு கால் கொடுக்கலாம். எஸ் எம் எஸ் மூலம் உங்களுக்கு தகவல் அனுப்பப்படும்.

6 /6

உமங் செயலி மூலமும் உங்கள் கணக்கில் வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம். உங்கள் UAN எண் மற்றும் கடவுச்சொல்லை  உள்ளிட்டு வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கலாம்.