New Year கொண்டாட்டங்களுக்கு இந்த நகரங்களில் தடா

புத்தாண்டு விருந்துகளுக்கான வழிகாட்டுதல்கள்: இந்த நகரங்களில் கொண்டாட்டங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் குளிர்காலத்தில் COVID-19 வழக்குகள் அதிகரிப்பதைத் தடுக்க கடுமையான விழிப்புடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு, மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.

 

புதுடெல்லி: இந்தியாவின் பல பெருநகரங்களில் COVID-19 தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் முந்தைய ஆண்டுகளைப் போலவே இருக்காது. தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் இரவுகளைப் போலவே, பொது இடங்களில் கடுமையான விதிகள் செயல்படுத்தப்படும். இங்கிலாந்தில் கொரோனா புது மாறுதலுடன் வெளிப்பட்டிருப்பதால், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க, சட்டங்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன. தற்போதைய மேம்பட்ட கொரோனா வைரஸ் முந்தைய பதிப்பை விட விரைவில் பரவலாம் என்றும், 70% அதிகமாக பரவலாம் என்றும் நம்பப்படுகிறது.

Also Read | PF balance, EPFO வட்டி பற்றி தெரிந்துக் கொள்ள சுலபமான வழிகள்

1 /6

சென்னை: ஈ.சி.ஆர் அல்லது ஓ.எம்.ஆர் அருகே ரிசார்ட்டுகளில் தங்கியிருக்கும் விருந்தினர்கள் சரியான அடையாள ஆதாரத்தை வழங்கினால் மட்டுமே டிசம்பர் 31 இரவு 10 மணி வரை மட்டுமே இந்த வழித்தடங்களில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள், கடற்கரைகள், பண்ணை வீடுகள் மற்றும் ஹோட்டல் / கிளப்புகளில் எந்த நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி கிடையாது.  

2 /6

டெல்லி: இரவு ஊரடங்கு உத்தரவுப்படி - உணவகங்கள், விடுதிகள் மற்றும் பிற பொழுதுபோக்கு நிறுவனங்கள் இரவு 11 மணிக்குள் மூடிவிட வேண்டும். 2020 டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 11 மணிக்குள் கடையை மூடத் தவறும் உணவகங்கள் மற்றும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். புத்தாண்டு தினத்தன்று நடைபெறும் பொது நிகழ்வுகள் அல்லது மொட்டை மாடி விருந்துகளுக்கு எதிராக டெல்லி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. முறையான போலிஸ் அனுமதியின்றி செய்யப்படும் எந்தவொரு நிகழ்ச்சியும் சட்டப்பூர்வமாக கருதப்படாது மற்றும் அமைப்பாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

3 /6

மும்பையில் இரவு 11 முதல் 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு:  ஏற்கனவே 2021 ஜனவரி 5 வரை நடைமுறையில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு உள்ளது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்  வீட்டிலிருந்து வெளியேறுவதைத் தவிர்க்க வேண்டும் என்று மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.   மும்பையில் சுமார் 35,000 மும்பை காவல்துறை அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு நிலைமையை பராமரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். COVID-19 விதிமுறைகளை மீறுவது அனுமதிக்கப்படாது. மொட்டை மாடிகளிலும் படகுகளிலும் எந்தக் விருந்து நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி கிடையாது. மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

4 /6

பெங்களூர்: நகரத்தில் COVID-19 பரவாமல் தடுப்பதற்கான அனைத்து தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அமல்படுத்த பெங்களூரு நகர காவல்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பொது இடங்களில் அல்லது திறந்தவெளிகளில் நான்கு பேருக்கு மேல் ஒன்றாக சேர அனுமதி கிடையாது. குடும்பங்கள் தங்கள் சொந்தங்களுடன் சேர்ந்திருக்க விரும்பினால் அது வீட்டில் மட்டுமே நடைபெறவேண்டும்.  பொது இடங்களில் கூடுவதற்கு அனுமதிக்கப்படாது. வீட்டு (Building societies) மற்றும் கிளப்புகள், 4 க்கும் மேற்பட்டவர்களைக் கூட்ட அனுமதிக்காது, பொது கொண்டாட்டங்கள் எதற்கும் அனுமதி கிடையாது.  

5 /6

நொய்டா: 2020 டிசம்பர் 31 ஆம் தேதிக்கான விரிவான வழிகாட்டுதல்கள் 30 டிசம்பர் 2020 அன்று வெளியிடப்படும். இந்த ஆண்டு நொய்டாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான ஒரு இடத்தில் 100 க்கும் மேற்பட்ட நபர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். டிசம்பர் 31 ம் தேதி தம் கெளதம் புத் நகரில் (Gautam Budh Nagar) விருந்துகள் மற்றும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் அனைத்து ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கிளப்புகளின் உரிமையாளர்கள் மாவட்ட நீதவான் அல்லது போலீஸ் கமிஷனரிடமிருந்து (district magistrate or commissioner of police) அனுமதி பெற வேண்டும், அத்துடன் விருந்தினர்களின் எண்ணிக்கையையும் தெரிவிக்க வேண்டும்.

6 /6

கொல்கத்தா சில பொது செயல்பாடுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது: புத்தாண்டு தினத்தன்று கொல்கத்தா சில பொது விழாக்களுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது,  புதுடெல்லியில் தொடரும் வேளாண் சட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், CAA எதிர்ப்பு போன்ற விஷயங்களை அடிப்படையாகக் கொண்ட சில நிகழ்வுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை அனைத்துமே நிலையான COVID-19 கட்டுப்பாட்டு SOPகளை கடைபிடிக்க வேண்டும்.