சூரிய அஸ்தமனத்திற்கு பின்.. ‘இவற்றை’ தானம் செய்தால் லட்சுமி கடாட்சம் போய் விடும்..!!

சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு  குறிப்பிட்ட 5 பொருட்களை தானம் செய்தால், லட்சுமி தேவி வீட்டை விட்டு சென்று விடுவாள் என்றும், வீட்டில் லட்சுமி கடாட்சம் இருக்காது எனவும் வாஸ்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

வாஸ்து சாஸ்திரத்தின்படி, சூரிய அஸ்தமனதிற்கு பிறகு, ஐந்து பொருட்களை தானம் செய்தால், உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி தங்காது. லட்சுமி தேவியின் அருளைப் பெற விரும்பினால், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இந்த 5 பொருட்களை தானம் செய்யாதீர்கள்.

1 /8

மனிதர்கள் அனைவருமே செல்வ செழிப்புடன் சுகமாக வாழ வேண்டும் என்று தான் நினைப்பார்கள். குறிப்பாக, மகாலட்சுமி தேவியின் ஆசீர்வாதம் எப்போதும் இருந்தால், நம் வாழ்வில் பணத்திற்கு பஞ்சமே இருக்காது.

2 /8

சில நேரங்களில் மிகவும் கடினமாக உழைத்தாலும், நாம் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். நாம் செய்யும் சில தவறுகளால், எதிர்மறை ஆற்றல் ஏற்பட்டு, நம் வாழ்க்கையை சீர் குலைக்கிறது. அதில் ஒன்றும் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சில பொருட்களை தானமாக வழங்குதல்.

3 /8

உப்பு:  சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு உப்பு தானம் செய்யக்கூடாது என்கிறது வாஸ்து சாஸ்திரம். இதனால் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கிறது. இதனால் குடும்ப உறுப்பினர்க்கு இடையில், உறவுகள் கெட்டுவிடும். வாழ்க்கையில் ஏற்படும் முன்னேற்றத்தையும் செழிப்பையும் தடுக்கிறது.

4 /8

வெங்காயம் மற்றும் பூண்டு : வாஸ்து படி,கேது கிரகத்துடன் தொடர்புடைய பூண்டு மற்றும் வெங்காயம் தாமச உணவாக கருதப்படுகிறது. மாலையில் வெங்காயம் மற்றும் பூண்டு தானம் செய்வது உங்கள் வாழ்க்கையில் கேது கிரகத்தின் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால், குடும்ப உறவுகள் பாதிக்கப்படத் தொடங்குகின்றன.

5 /8

மஞ்சள் தானம்: சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மஞ்சள் தானம் செய்யவே கூடாது. இதனால் குரு பலவீனமடையும். மஞ்சள் குரு பகவானின் காரணியாகக் கருதப்படுகிறது. எனவே சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மஞ்சள் தானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

6 /8

பால் தானம்: சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பால் தானம் செய்வதால், சந்திரன் வலுவிழந்து, வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்காது . மனமும் நிலையாக இருக்காது தொடர்புடையது. மாலையில் பால் தானம் செய்வதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் போய் விடும்.

7 /8

பணம் தானம்: மாலையில் பணத்தை தானம் செய்யக்கூடாது. அன்னை லட்சுமி சூரிய அஸ்தமனத்தில் வீட்டிற்கு வரும் நிலையில், இந்த நேரத்தில் யாருக்காவது பணம் கொடுத்தால், அன்னை லட்சுமி தேவி உங்கள் வீட்டை விட்டு சென்று விடுவார்.

8 /8

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.