Mobility Card இருந்தால் போதும் இனி Debit / Credit Card தேவையில்லை

டெபிட் / கிரெடிட் கார்டு, மெட்ரோ கார்டு என பல கார்டுகளை வைத்திருக்க வேண்டிய அவசியம் முடிவுக்கு வருகிறது. ஒற்றை அட்டை மூலம், எல்லா வேலைகளையும் செய்யலாம்

புதுடெல்லி: ஒரு தேசம், ஒரு இயக்கம் அட்டை (One Nation, One Mobility Card) மூலம் நாட்டில் நவீன பணம் செலுத்தும் முறைகள் அறிமுகமாகிவிட்டன. இந்த ஒரே அட்டையிலிருந்து மக்களுக்கு பல வசதிகள் கிடைக்கும். பல அட்டைகளை பத்திரமாக கையாள வேண்டிய அவசியம் இனி இல்லை.

1 /7

தனியார் மற்றும் அரசாங்க வங்கிகள் இப்போது தேசிய பொது இயக்கம் அட்டை (National Common Mobility Card) எனப்படும் NCMC கொண்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. NCMC அட்டையைப் பெற, நுகர்வோர் தனது வங்கியை தொடர்பு கொள்ள வேண்டும். 25 வங்கிகள் மற்றும் Paytm கொடுப்பனவு வங்கியிலும் (Paytm Payment Bank) இந்த அட்டை கிடைக்கிறது. இந்த அட்டையின் ஒரு அம்சம் என்னவென்றால், ஏடிஎம்மில் பயன்பாட்டில் 5% கேஷ்பேக் பெறுவதோடு, வெளிநாட்டு பயணங்களின் போது வணிக விற்பனை நிலையங்களில் பணம் செலுத்துவதில் 10% கேஷ்பேக் கிடைக்கும்.

2 /7

தேசிய பொதுவான இயக்கம் அட்டை (NCMC National Common Mobility Card (NCMC)) நன்மைகள் என்ன தெரியுமா? இந்த மொபிலிட்டி கார்டு ஒரு வங்கியின் டெபிட் கார்டாகவும் செயல்படும், அதாவது, இந்த அட்டை மூலம் நீங்கள் ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுக்கலாம், ஷாப்பிங் செய்யலாம் மற்றும் டெல்லி மெட்ரோவில் பயணம் செய்யலாம்.

3 /7

டெல்லி மெட்ரோவின் விமான நிலைய எக்ஸ்பிரஸ் ரயிலில் (Airport Express Line) பயணிக்க இப்போது நீங்கள் மெட்ரோ கார்டு அல்லது டோக்கன் (Metro Card or Token) வாங்கத் தேவையில்லை. இந்த சேவையை பயன்படுத்த நீங்கள் தேசிய பொது இயக்கம் அட்டை (NCMC) வைத்திருந்தால் போதும். உண்மையில், இது ஒரு சாதாரண அட்டை மட்டுமல்ல, அதை வைத்திருந்தால், நீங்கள் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

4 /7

நெடுஞ்சாலையில் கட்டணம் செலுத்த முடியும் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு (National Common Mobility Card (NCMC)) ஒரு செயல்பாட்டு இயக்க அட்டை, இது 2019 மார்ச் 4ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது. இது போக்குவரத்து அட்டையாக  வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் இந்த அட்டை மூலம் எந்தவொரு பயணக் கட்டணத்தையும் செலுத்த முடியும். அதுமட்டுமல்ல, இந்த அட்டையை பயன்படுத்தி தேசிய நெடுஞ்சாலையில் toll கட்டணத்தையும் செலுத்தலாம் 

5 /7

2022 முதல் அனைத்து மெட்ரோ வழித்தடங்களிலும் NCMC வசதி:  NCMC வசதி, டெல்லி மெட்ரோ நெட்வொர்க் முழுமைக்கும் 2022 க்குள் அறிமுகப்படுத்தப்படும்.  

6 /7

டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் (DMRC) புதுடெல்லியில் இருந்து துவாரகா செக்டர் 21 வரை 23 கி.மீ நீளமுள்ள விமான நிலைய எக்ஸ்பிரஸ் பாதையில் 2020 டிசம்பர் 28 முதல் NCMC அட்டையை ஏற்றுக் கொள்ளும் என்று தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) தெரிவித்துள்ளது. இந்த வசதியின் மூலம்,  Rupay card வைத்திருப்பவர்கள் தங்கள் அட்டைகளைப் பயன்படுத்தி நேரடியாக மெட்ரோவில் பயணிக்கலாம், அவர்கள் மெட்ரோ அட்டை அல்லது டோக்கன் வாங்க நீண்ட வரிசைகலில் காத்திருக்க வேண்டியதில்லை. இந்த ரூபே கார்டு (Rupay card) பயணச்சீட்டு போல வேலை செய்யும்.

7 /7

மத்திய நகர்ப்புற வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சகம் (Union Ministry of Urban Housing and Urban) தேசிய பொது இயக்கம் அட்டையை (NCMC) 'ஒரு தேசம், ஒரு அட்டை' என்று உருவாக்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் நீங்கள் ரூபாய் டெபிட் கார்டை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை, உங்கள் ரூபே கார்டு செயலியின் (Rupay card app) மூலம் NFC Enabled (Near Field Communication) ஸ்மார்ட்போனை பயன்படுத்தி பயணம் செய்யலாம். அதாவது ஒரு அட்டையை வைத்துக் கொண்டே பண பரிவர்த்தனைகளையும் செய்யலாம், பயணிக்கவும் பயன்படுத்தலாம்.