இந்த 5 பேர் தான்! ஏலத்திற்கு முன்பு சிஎஸ்கே தக்க வைக்க போகும் வீரர்கள்!

ஐபிஎல் 2025 ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் யார் யாரை தக்க வைக்க போகிறோம் என்று முடிவை எடுத்துள்ளது. விரைவில் அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

 

1 /6

ஐபிஎல் 2023ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக பட்டத்தை வென்றது. தற்போது 43 வயதான தோனி அடுத்த ஆண்டு விளையாடுவாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது.  

2 /6

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தனது கேப்டன்சியை ருதுராஜ் கெய்க்வாடிடம் ஒப்படைத்தார். சீசன் முழுவதும் ஒரு வீரராக மட்டுமே செயல்பட்டார் தோனி.   

3 /6

2025 ஐபிஎல் மெகா ஏலம் வர உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை தக்க வைக்க தயாராக உள்ளது. மேலும் ஷிவம் துபே, மதீஷா பத்திரனா, ரவீந்திர ஜடேஜா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை தக்க வைக்க உள்ளது.  

4 /6

எத்தனை வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என்ற அறிவிப்பை பிசிசிஐ தற்போது வரை வெளியிடவில்லை. எனவே அவர்களின் அறிவிப்பை தொடர்ந்து சிஎஸ்கே-வின் முடிவு மாறலாம்.  

5 /6

5 ஆண்டுகளுக்கும் மேல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களை அணியில் தக்கவைத்துக்கொள்ளும் பழைய விதியை பிசிசிஐ மீண்டும் கொண்டு வந்தால் சிஎஸ்கே-விற்கு சாதகமாக இருக்கும்.  

6 /6

மேலும் சமீர் ரிஸ்வி போன்ற இளம் வீரர்களை சென்னை அணி தக்க வைக்குமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.