பாதிப்படைந்த கல்லீரலின் 5 அறிகுறிகள் பற்றி தெரியுமா

கல்லீரல் நமது உடலின் இன்றியமையாத உறுப்பு என்பது அனைவரும் அறிந்ததே. உடலில் உள்ள உணவை ஊட்டச்சத்துக்களாகவும் ஆற்றலாகவும் மாற்ற கல்லீரல் செயல்படுகிறது. உடலில் பல முக்கியமான செயல்பாடுகளுக்கு கல்லீரல் மிகவும் முக்கியமானது. கல்லீரல் இன்றி உடலின் பல இயக்கங்கள் தடைபட்டு நம்மால் வாழ முடியாது. அதன்படி கல்லீரல் சேதமடைய ஆரம்பிப்பதை குறிக்கும் அறிகுறிகள் தென்பட்டால் அதை பெரிதாக எடுக்காமல் அலட்சியம் காட்டக் கூடாது. எனவே உங்கள் கல்லீரல் சேதமடைந்திருப்பதைக் காட்டும் 5 முக்கிய அறிகுறிகள் எவை என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

1 /5

தொடர்ந்து பல நாட்களுக்கு வாந்தி எடுத்தால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்.

2 /5

பெரும்பாலான மக்கள் பசியின்மை பற்றி புகார் செய்யத் தொடங்குகிறார்கள். இந்த புகார் 15 நாட்களுக்கு தொடர்ந்து நடந்தால், நீங்கள் அதை அசால்ட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது, ஏனென்றால் இதுவும் மோசமான கல்லீரல் அறிகுறியாகும்.

3 /5

கல்லீரல் பாதிப்புக்கு இது ஒரு பொதுவான அறிகுறி ஆகும்.கல்லிரல் சரியாக இயங்கவில்லை எனில் உடல் கடினமாக இயங்க வேண்டும்.எனவே அதிக ஓய்வு தேவைப்படும்.ரத்த ஓட்டத்தில் நச்சுக்கள் அதிகரித்து விடுகிறது.கல்லீரல் சரியாக இயங்காததால் நச்சுக்கள் வெளியேற்றப்படாமல் உடலில் தங்கி விடுகின்றன.

4 /5

பல சமயங்களில் பருவ மாற்றத்தினால் வயிற்றுப்போக்கு ஏற்படும். ஆனால் அது சாதாரண வயிற்றுப்போக்காக இருக்கும் என்று கூறமுடியாது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அதீத கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் இது கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம். 

5 /5

இது தவிர, திடீரென்று உங்கள் எடை குறைய ஆரம்பிக்கும். ஏனெனில் சில நேரங்கள் கல்லீரலை சேதப்படுத்தலாம், இத்னால் எடை வேகமாக குறையத் தொடங்குகிறது.