சத்தீஸ்கரில் நக்சலைட் தாக்குதலில் 6 பாதுகாப்பு படை வீரர்கள் பலி

சத்தீஸ்கர் மாநிலம் தாண்டிவாடா மாவட்டத்தில் நக்சலைட் தாக்குதலில் ஆறு வீரர்கள் பலி. 

Written by - Shiva Murugesan | Last Updated : May 20, 2018, 03:19 PM IST
சத்தீஸ்கரில் நக்சலைட் தாக்குதலில் 6 பாதுகாப்பு படை வீரர்கள் பலி title=

சத்தீஸ்கர் மாநிலம் தாண்டிவாடா மாவட்டம் சோழனார் கிராமத்தில் 7 பாதுகாப்பு படை வீரர்களுடன் போலீஸ் வாகனம் சென்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது அங்கு பதுக்கி வைத்திருந்த வெடுகுண்டு வெடித்ததால், சம்பவ இடத்திலேயே ஐந்து பாதுகாப்பு படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் மூன்று பேர் சத்தீஸ்கர் மாநில ஆயுதப்படையைச் சேர்ந்தவர்கள், இரண்டு பேர் மாவட்ட காவல்துறையை படையை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு வீரருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டி வருகிறது.

 

 

ஆறு ஜவான்கள் கொல்லப்பட்டு உள்ளனர். ஒருவர் படு காயமடைந்துள்ளார். குண்டுவெடிப்பு தீவிரமாக இருந்திருக்கலாம். இதுக்குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். தாக்குதலில் பற்றி சரியான விவரங்கள் விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என டிஐஜி பி. சுந்தர் ராஜ் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த இடத்திற்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பீ.பீ.) சென்றுள்ளனர். தகவல்களை சேகரித்து வருகின்றனர்

Trending News