அஜித் தரிசனம்... கோயிலில் காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகை

சமயபுரத்திற்கு அஜித் வருவார் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தபோது நடிகை யாஷிகா ஆனந்த் வந்ததால் அவருடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 24, 2022, 04:47 PM IST
  • அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்துவருகிறார்
  • வெளிநாடு பயணத்தை முடித்துவிட்டு சமீபத்தில் தமிழகம் திரும்பினார்
  • சமயபுரத்துக்கு அவர் வருவதாக தகவல் பரவியது
 அஜித் தரிசனம்... கோயிலில் காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகை title=

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்தை திரைப்படங்களைத் தவிர்த்து பொது நிகழ்ச்சிகளில் காண முடியாது. அவரைப் பொறுத்தவரை நடிப்பதோடு தன்னுடைய வேலை முடிந்துவிட்டதென்று கருதுபவர். அவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவந்த சூழலில் அவர் லண்டன் சென்று சில நாள்கள் இருந்துவிட்டு பைக் ரைடும் செய்தார். அதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாக பரவின.ஹைதராபாத்தில் நடந்துவந்த ஏகே 61 ஷூட்டிங் முடிந்ததை அடுத்து தற்போது சென்னையில் நடந்துவருகிறது.

இதற்கிடையே அஜித் தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு சமீபத்தில் சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவரிடம் புகைப்படம் எடுக்க ஒருவர் அனுமதி கேட்டதும், அதற்கு அஜித் ஒத்துக்கொண்டதும் வீடியோவாக வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டது.

Ajithkumar

இந்தச் சூழலில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அஜித் சாமி தரிசனம் செய்ய வருவதாக நேற்று இரவு தகவல் பரவியது. இதனால் அஜித்தை காண்பதற்கு அவரது ரசிகர்கள் கோயிலுக்கு பின்புற வாசலில் காத்திருந்தனர். ரசிகர்கள் அதிகளவு குவிந்த செய்தி அறிந்தவுடன் காவல் துறையினரும் அங்கு விரைந்துசென்று கூட்டத்தை ஒழுங்குப்படுத்த ஆரம்பித்து பாதுகாப்பு பணிகளில் தீவிரம் செலுத்தினர்.

மேலும் படிக்க | ‘நம்பர் 1’ யாரு? சமந்தாவா, நயன்தாராவா?- திரி கிள்ளிப்போட்ட கரன் ஜோகர்; தீயாய் வெடித்தது சர்ச்சை!

ஆனால் இரவு 9 மணிவரை அஜித் கோயிலுக்கு வரவில்லை. இதனால் காத்திருந்த ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். அந்த நேரத்தில் பிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் சமயபுர கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்தார்.

Yashika Anand

அவரைப் பார்த்தவுடன் மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள முண்டியடித்தனர். இதனால் அவரால் ஒரு மணி நேரம் எங்குமே நகரமுடியவில்லை. ஒருவழியாக காவல் துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்தி யாஷிகாவை பத்திரமாக அழைத்து சென்றனர்.

மேலும் படிக்க | பேனா சின்னமா?... ஆக்கப்பூர்வமான விஷயத்தை செய்யுங்கள் - அரசுக்கு விஜயகாந்த் அட்வைஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News