"புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்" : மீரா மிதுனுக்கு எதிராக பிடி வாரண்ட்..!

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நடிகை மீரா மிதுனுக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு முதன்மை அமர்வு நீதிமன்றம் பிடிவாரண்ட்  பிறப்பித்து  உத்தரவிட்டுள்ளது.

Written by - Dayana Rosilin | Last Updated : Mar 24, 2022, 12:48 PM IST
  • வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத மீரா மிதுன்
  • பிடிவாரண்ட் பிறபித்த நீதிமன்றம்
  • மீரா மிதுனை தேடி வரும் போலீஸார்
"புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்" : மீரா மிதுனுக்கு எதிராக பிடி வாரண்ட்..!  title=

சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் பெயர்போனவர் நடிகை மீரா மிதுன். இவரை பற்றி புதிதாக அறிமுகப்படுத்த ஒன்றும் இல்லை என்றே சொல்லலாம். 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவில் ( Bigg Boss ) பங்கேற்று மக்கள் மத்தியில் அறிமுகமானார். பெரிய அளவில் பட வாய்ப்புகள் வராத நிலையில் அதிருப்தி அடைந்த மீரா மிதுன் தமிழ் திரையுலக பிரபலங்கள் பற்றி தரக்குறைவாக பேசி தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து வந்தார்.

அதனால், அவரை திட்டி தீர்ப்பதற்காகவே ஒரு ஃபாளோவர்ஸ் பட்டாளம் உறுவானது. இதனால் ஒரு பறம் வருத்தம் இருந்தாலும் தனது கருத்தை எதிர்மறையாக கேட்பதற்காவது ஒரு கூட்டம் இருக்கிறதே என்ற பாணியில் மீரா மிதுன் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசி வந்தார். செய்தி சேனல்கள், சமூக வலைதளப்பக்கங்கள் என எங்கு சென்றாலும் மீரா மிதுன் குறித்த தகவல்களும், செய்திகளும் உலா வந்தன. இதனை தொடர்ந்து, பிரபல நடிகர்கள் மற்றும் அவர்களுடைய மனைவி உள்ளிட்ட அனைவரையும் இழிவாக பேசிய மீரா மிதுன், பட்டியலின மக்கள் குறித்து தரக்குறைவாக பேசி அந்த வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

மேலும் படிக்க | நாக சைதன்யாவுக்காக சமந்தா கொடுத்த இன்ஸ்டா மெசேஜ்? இதை வேறு செய்துள்ளாரா?

இதனை தொடர்ந்து சினிமா வட்டாரத்தில் மட்டுமே அறிமுகமாகி இருந்த மீரா மிதும் அரசியல் வட்டாரத்திலும் அறிமுகமானார். அதன் விளைவாக மீரா மிதுனை உடனே கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் போலீஸில் புகார் அளித்தார். இவரின் புகாரை ஏற்ற தமிழக காவல்துறை அதிகாரிகள், கேரளாவில் ஆண் நண்பருடன் இயற்கையோடு ஒன்றி இருந்த மீரா மிதுனை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்ட மீரா மிதுன் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.

இது தொடர்பான வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுன் நேரில் ஆஜராகத நிலையில் அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்குமாறு நீதிபதி போலீஸாருக்கு உத்தரவிட்டார். ஜாமீனில் வெளியில்வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் போலீஸார் மீரா மிதுனை தேடி வருகின்றனர்.  

மேலும் படிக்க | 'விஜய்' படத்தைத் தட்டித் தூக்கிய அனிருத்! - #Exclusive!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News