மனைவியின் தாய்ப்பாலை குடித்த பிரபல நடிகர்! இதற்கு பின்னால் இப்படியொரு காரணமா?

Ayushmann Khurrana Drank Tahira Kashyap Breast Milk : பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானாவின் மனைவி சமீபத்தில் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். அதில், தனது கணவர் தன் தாய்ப்பாலை திருடி குடிப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.   

Written by - Yuvashree | Last Updated : Aug 23, 2024, 05:52 PM IST
  • பாலிவுட்டின் பிரபல நடிகர் ஆயுஷ்மான் குரானா
  • இவர் தனது மனைவியின் தாய் பாலை குடித்தாராம்
  • இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன?
மனைவியின் தாய்ப்பாலை குடித்த பிரபல நடிகர்! இதற்கு பின்னால் இப்படியொரு காரணமா? title=

Ayushmann Khurrana Drank Tahira Kashyap Breast Milk : ஒரு சில செய்திகளை படிக்கையில் நமக்கே பகீர் என தூக்கி வாரிப்போட்டு விடும். அதிலும்,  அந்த செய்தியில் நமக்கு தெரிந்த ஒரு பிரபலம் இருக்கிறார் என்று தெரிந்து விட்டால் அவ்வளவுதான். அது போன்ற செய்தி ஒன்றுதான் தற்போது பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானாவை சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிறது. 

யார் அந்த பிரபல நடிகர்? 

இந்தி படங்களில் நடித்தாலும் தமிழ் திரையுலகில் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி வைத்திருப்பவர், ஆயுஷ்மான் குரானா. காரணம், இவர் நடித்த பல படங்கள் தமிழில் ரீ-மேக் செய்யப்பட்டுள்ளன. அது மட்டுமல்ல, வழக்கமான பாலிவுட்டின் ஹீரோக்களில் இருந்து மாறுபட்டவராக இருக்கும் இவர், தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதற்கும் பெயர் பெற்றவர். 

தாராள பிரபு, நெஞ்சுக்கு நீதி, வீட்ல விஷேஷம், அந்தகன் உள்ளிட்ட படங்கள், இவர் நடிப்பில் வெளியான இந்தி படங்களின் ரீ-மேக்தான். இவர் நடிப்பிற்கு ரசிகர்கள் இருக்கின்றனரோ இல்லையோ, இவரது கதை தேர்ந்தெடுப்பிற்கு ரசிகர்கள் பலர் இருக்கின்றனர். இப்போது இவரை சுற்றித்தான் அந்த தாய்ப்பால் சர்ச்சை வலம் வருகிறது. 

திருமணம்..மனைவி..குழந்தைகள்..

நடிகர் ஆயுஷ்மான் குரானா, 2008ஆம் ஆண்டு தாஹிரா காஷ்யப்பை திருமணம் செய்து கொண்டார். சில வருடங்கள் காதலித்து பின்பு திருமணம் செய்து கொண்ட இவர்கள், பாலிவுட் ரசிகர்களின் ஃபேவரட் ஜோடிகளாக வலம் வருகின்றனர். தாஹிரா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தவர். இவருக்கும் ஆயுஷ்மான் குரானாவிற்கும் ஒரு மகன்-ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். 

மேலும் படிக்க | சட்ட விராேதமாக தாய்ப்பால் விற்பனை! வணிக மையத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்..

தாய் பாலை திருடி குடித்தார்!

ஆயுஷ்மான் குரானாவின் மனைவி தாஹிரா, ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் ஆவார். சில படங்களிலும் பணிபுரிந்திருக்கிறார். The 7 Sins Of Being A Mother (தாயாக இருப்பதன் 7 பாவங்கள்) என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதில், தனது கணவர் குறித்து பேசியிருக்கும் அவர் ஆயுஷ்மான் குரானா, ஊட்டச்சத்துக்காக தனது தாய்ப்பாலை திருடி புரோட்டின் ஷேக்காக பயன்படுத்தியதாக கூறியிருக்கிறார். தான், பாங்காங்கிற்கு பயணம் செய்வதற்கு முன்பு, தனது ஏழு மாத குழந்தைக்காக தாய் பாலை பாட்டிலில் எடுத்து வைத்திருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். 

மறைத்து வைத்து..!

தொடர்ந்து, அந்த பாட்டிலை காணவில்லை என்று தான் தேடியதாக தாஹிரா குறிப்பிட்டிருக்கிறார். அது குறித்து படுக்கையில் படுத்து ஓய்வு எடுத்து கொண்டிருந்த தனது கணவரிடம் கேட்டதாகவும் அதற்கு அவர் குலுங்கி குலுங்கி சிரித்ததாகவும் கூறியிருக்கிறார். மேலும், அந்த பால் சரியான வெப்பநிலையில் இருந்ததாகவும் அது தனக்கு சத்து கொடுக்கும் என்பதால் குடித்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். இந்த சம்பவத்திற்கு பிறகு தான் எப்போது குழந்தைக்காக பாலை எடுத்து வைத்தாலும் மறைத்து வைத்துதான் கொடுப்பதாக குறிப்பிட்டிருக்கிறார் தாஹீரா.

மேலும் படிக்க | மனைவியிடம் தாய் பால் குடிக்கும் கணவன்... நன்மைகள் கொட்டி கிடக்குதாம்.. இது நல்லா இருக்கே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News