ரத்தன் டாடா பயோபிக்கில் நடிகர் மாதவன் நடிக்கிறாரா.. உண்மை என்ன..!!!

இந்தியாவின் மிக பெரிய தொழிலதிபர் ரத்தன் டாடாவின் பயோபிக்கில் மாதவன் நடிக்கிறார் என்ற செய்தி வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக  நடிகர் மாதவன் விளக்கம் அளித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 14, 2020, 06:09 PM IST
  • இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவர் ரத்தன் டாடா.
  • கோவிட்-19 நெருக்கடி சமயத்தில் 500 கோடி ரூபாய் நிதியை அறக்கட்டளைக்கு ஒதுக்கினார்.
  • ட்விட்டரில், ரத்தன் டாட்டாவின் பயோபிக் தொடர்பாக, மாதவனின் ரசிகை ஒருவர் மாதவனிடம் கேள்வி கேட்டிருந்தார்.
ரத்தன் டாடா பயோபிக்கில்  நடிகர் மாதவன் நடிக்கிறாரா.. உண்மை என்ன..!!! title=

இந்தியாவின் மிக பெரிய தொழிலதிபர் ரத்தன் டாடாவின் பயோபிக்கில் மாதவன் நடிக்கிறார் என்ற செய்தி வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக  நடிகர் மாதவன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக, அவர் பெரிய அளவில் சாதனைகள் புரிந்தவர் என்பதை அனைவரும் அறிவார்கள். அவர் பொதுநல பணிகளுக்கு நன்கொடையை வாரி வழங்குவதில் புகழ் பெற்றவர்.

கோவிட்-19 (COVID-19) நெருக்கடி சமயத்தில் 500 கோடி ரூபாய் நிதியை அறக்கட்டளைக்கு ஒதுக்கிய செயல் அனைவரையும் கவர்ந்தது. அப்போது அந்த தகவலை பகிர்ந்திருந்த நடிகர் மாதவன், இதுதான் உண்மையான டாடாவின் ஆளுமை, பாராட்டுகள் என்று குறிப்பிட்டிருந்தார்.

ரத்தன் டாடாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட பயோபிக்கில், நடிகர் மாதவன் டாடாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், இதைச் சுதா கொங்கரா இயக்கவுள்ளதாகவும் தொடர்ந்து செய்திகள் வந்தன. மாதவன் டாடா கதாபாத்திரத்தில்  இருப்பது போல் சித்தரிக்கபட்டுள்ள சில புகைப்படங்களும் கூட வெளிவந்தன.

இன்று ட்விட்டரில், இது தொடர்பாக, மாதவனின் (Madhavan) ரசிகை ஒருவர் மாதவனிடம் கேள்வி கேட்டிருந்தார். டாடாவாக மாதவன் நடிப்பது உண்மையா என்றும் இது நடந்தால் பலருக்கும் இது ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்திருந்த மாதவன், "துரதிர்ஷ்டவசமாக இந்த செய்தி உண்மையில்லை. ரசிகர்கள் சிலர் அவர்கள் விருப்பத்தில் உருவாக்கிய போஸ்டர். இப்படி ஒரு திரைப்படத்தில் நடிக்கப் போவதாகவும் இல்லை. அது தொடர்பாக எந்த வித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கைக் கதையைச் அடிப்படையாக கொண்ட பயோபிக் ஆன  ’ராக்கெட்ரி’ என்கிற திரைப்படத்தில் மாதவன் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://zeenews.india.com/tamil/movies/bollywood-actress-kangana-ranaut-..." target="_blank">ALSO READ | ‘தலைவி’ படபிடிப்பு முடிந்தது.. இந்த படம் தனக்கு கிடைத்த அறிய வாய்ப்பு: கங்கனா

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News