டிராமா போடும் முத்துப்பாண்டி…பாக்கியம் எடுத்த முடிவு - அண்ணா சீரியல் இன்றைய அப்டேட்

Anna Serial Update Tamil: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.

Written by - Yuvashree | Last Updated : Feb 8, 2024, 04:05 PM IST
  • ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடர், அண்ணா.
  • இன்றைய ட்விஸ்ட் என்ன?
  • பரபர திருப்பங்களுடன் அண்ணா தொடர்.
டிராமா போடும் முத்துப்பாண்டி…பாக்கியம் எடுத்த முடிவு - அண்ணா சீரியல் இன்றைய அப்டேட் title=

Anna Zee Tamil Serial Update Timing And Plot: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகம் கனிக்காக சாப்பிட ஒத்துக்கொண்டு தங்கச்சிகள் அனைவரையும் சாப்பிட சொன்ன நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது சண்முகம் தங்கச்சிகளை சாப்பிட வைத்து அவனும் சாப்பிடுகிறான். இருந்தாலும் இங்கே இவன் பயங்கர கோபத்தில் இருக்க மறுப்பக்கம் பாண்டியம்மா இப்போதைக்கு இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க ஒரே வழி இசக்கியை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதுதான் என்று சொல்கிறார்.    

பாண்டியம்மாவின் இந்த ஐடியாவை கேட்டு சௌந்தரபாண்டி முத்துப்பாண்டி மறுப்பு தெரிவிக்க இப்போதைக்கு இந்த பிரச்சனை தீர்க்க இது ஒன்று மட்டும்தான் வழி பாக்கியம் மனசை மாத்தி இசக்கியை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்லணும் என்று சொல்ல சௌந்தரபாண்டி ஒப்புக்கொள்கிறார்.  

மேலும் படிக்க | சந்தியா ராகம் அப்டேட்: மாயாவுக்கு வில்லியாகும் ஷாரு.. தனத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிறகு பாக்யாவிடம் நீ போய் சண்முகம் வீட்டில் பேசி இசக்கியை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வா என்று சொல்ல சிவபாலன் வாழ வேண்டிய வாழ்க்கை, இசக்கியை இங்க கூட்டிட்டு வந்தா அவ மனசு என்ன பாடு படும் என்று கேட்க அப்படின்னா பஞ்சாயத்தை கூட்டி இசக்கி கழுத்துல இருக்க தாலியை அறுத்து எறிஞ்சிடலாம் திரும்பவும் உன் புள்ள ரத்னா கழுத்துல தாலி கட்டுறேன்னு அலையட்டும் ரெண்டு பொண்ணோட வாழ்க்கை கெட்டுப் போகட்டும் என்று சொல்கிறான். 

இதனால் பாக்கியம் செய்தியை கூட்டிவர சண்முகம் வீட்டிற்கு வருகிறாள். சண்முகம் இல்லாத நிலையில் எல்லோரிடமும் இசக்கிய என் கூட அனுப்புங்க நான் நல்லபடியா பாத்துக்குறேன் என்று சொல்ல அதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர். இசக்கியை அனுப்பலன்னா சண்முகம் முத்துப்பாண்டியை கொன்னுட்டு ஜெயிலுக்கு போய் விடுவான். அப்புறம் தங்கச்சிங்களோட நிலைமை என்ன ஆகிறது.? அதுக்கப்புறம் என் புருஷன் சும்மா இருப்பானா? அவன் ஏதாவது பண்ணா எப்படி சமாளிப்பீங்க என்று கேள்வி கேட்கிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | Lal Salaam: ‘லால் சலாம்’ ரஜினிகாந்தின் சம்பளம்..கேமியோ ரோலில் நடிக்க ‘இத்தனை’ கோடியா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News