அமீர்-பாவனி திருமணம் எப்போது? அவர்களே சொன்ன தகவல்!

Ameer Pavani: பிக்பாஸ் மூலம் பிரபலமான அமீர்-பாவனி, விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Jan 22, 2024, 06:44 PM IST
  • அமீர்-பாவனி பிக்பாஸில் சந்தித்தனர்.
  • இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.
  • அமீர்-பாவனி திருமணம் எப்போது?
அமீர்-பாவனி திருமணம் எப்போது? அவர்களே சொன்ன தகவல்! title=

தமிழ் திரைத்துறையில் நடன இயக்குநராக இருப்பவர், அமீர். இவரும், சின்னத்திரை நடிகை பாவனியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்களுக்கு எப்போது திருமணம் என்பது குறித்து ரசிகர்கள் அவ்வப்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அமீர்-பாவனியின் பிக்பாஸ் காதல்..

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஹிட் ஆன சீரியல்ளில் நடித்தவர், பாவனி. சின்ன தம்பி, ரெட்டை வால் குருவி உள்ளிட்ட தொடர்களின் மூலம் இவருக்கு பலர் ரசிகர்களாக மாறினர். பாவனி, ஏற்கனவே பிரதீப் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குள் ஒருமுறை சண்டை நிகழ்ந்த போது, அவர் வீட்டில் இருந்த போதே வேறு ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, பாவனிதான் அவர் தற்கொலைக்கு காரணம் என பலர் அபாண்டமாக பேசினர். அதையெல்லாம் விடுத்து, பாவனி பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொண்டார். 

நடன இயக்குநராக இருக்கும் அமீர், பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பாவனி சோர்வாக இருந்த சமயத்திலும், அவருக்கு அழுகையில் தாேள் தேவைப்படும் நேரத்திலும் உற்ற துணையாக இருந்தார். சில நாட்கள் கழித்து தனது காதலை பாவனியிடம் வெளிப்படுத்தி விட்டார். முன்னர் அதை ஏற்க மறுத்த பாவனி ‘பிக்பாஸ் ஜோடி’ நிகழ்ச்சியில் அந்த காதலை ஏற்றுக்கொண்டார். 

மேலும் படிக்க | புதிதாக சொகுசு கார் வாங்கிய விஜய்! விலை எவ்வளவு தெரியுமா?

விரைவில் திருமணம்? 

அமீரும் பாவனியும் காதலிக்க ஆரம்பித்த பிறகு, லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகின்றனர். இவர்களின் திருமணம் எப்போது என்பது குறித்து ரசிகர்கள் விடாமல் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால், அது குறித்து இருவரும் மூச்சு விடாமல் இருந்தனர். இதனால், இவர்களுக்குள் இருந்த உறவு முறிந்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால் இவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் அடிக்கடி வெளியாவதால் அது பொய்யான தகவல் என அனைவருக்கும் தெரிந்து விட்டது. 

இந்த நிலையில், இவர்கள் இருவருமே இந்த வருடத்திற்குள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர்களிடம் ஒரு நிகழ்ச்சியில் கேட்டதற்கு அவர்களும் அதை உண்மை என்று ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் பிரியங்கா தேஷ்பாண்டேதான் தாலி எடுத்து கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனால் இவர்களின் திருமணம் சில மாதங்களில் நடக்கும் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | பணத்தாசையால் சிக்கிய கோகிலா! பரபர திருப்பங்களுடன் கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News