7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் செய்தி.. விரைவில் 3 குட் நியூஸ்!!

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் விரைவில் 3 பெரிய பரிசுகளைப் பெறவுள்ளனர்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 25, 2023, 09:05 AM IST
  • ஜூலை 31 ஆம் தேதி ஜூன் புள்ளிவிவரங்கள் வெளிவரும்.
  • அகவிலைப்படியில் 4% உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • வீட்டு வாடகை கொடுப்பனவும் அதிகரிக்கப்படலாம்.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் செய்தி.. விரைவில் 3 குட் நியூஸ்!! title=

7 ஆவது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: அகவிலைப்படியை நிர்ணயிக்கும் ஏஐசிபிஐ குறியீட்டின் புதிய புள்ளிவிவரங்கள் ஜூலை 31 அன்று வெளியிடப்படும். ஜூலை முதல் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வளவு அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்பது அதன் பின்னர் தெளிவாகும். ஜூலை மாதத்தில் 4 சதவீத டிஏ உயர்வு இருக்கும் என்றும், அதன் பிறகு ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

3 பெரிய பரிசுகள்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் விரைவில் 3 பெரிய பரிசுகளைப் பெறவுள்ளனர். இது வரை வந்துள்ள ஏஐசிபிஐ குறியீடுகளின் படி, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஜூலைக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை அரசு 4 சதவிகிதம் உயர்த்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நடந்தால், ஊழியர்களின் அகவிலைப்படி 42 சதவிகிதத்தில் இருந்து 46 சதவீதமாக உயரும். இதன் மூலம் ஊழியர்களின் ஊதியமும் வெகுவாக அதிகரிக்கும். இதன் மூலம் 1 கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.

ஜூலை 31 ஆம் தேதி ஜூன் புள்ளிவிவரங்கள் வெளிவரும், அகவிலைப்படியில் 4% உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்படுகிறது. இந்த உயர்வு தொழிலாளர் துறையால் வெளியிடும் ஏஐசிபிஐ குறியீட்டின் புள்ளிவிவரங்களைப் பொறுத்தது. இதுவரை மே 2023 வரையிலான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் அகவிலைப்படி விகிதம் 45.57 புள்ளிகளை எட்டியுள்ளது. இப்போது ஜூன் மாத புள்ளிவிவரங்கள் மட்டுமே இன்னும் வரவில்லை. இது ஜூலை 31 அன்று வெளியிடப்படும். ஜூலை முதல் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி எவ்வளவு உயரும் என்பது அதன் பிறகு தெளிவாகும். ஜூலை மாதத்தில் 4 சதவீத டிஏ உயர்வு இருக்கும் என்றும், அதன் பிறகு ஊழியர்களின் டிஏ 46 சதவீதமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜூலை 1, 2023 முதல் செயல்படுத்தப்படும்

புதிய கட்டணங்கள் ஜூலை முதல் டிசம்பர் 2023 வரை அமலில் இருக்கும். வரவிருக்கும் தேர்தலுக்கு முன் ரக்ஷாபந்தன் அல்லது தீபாவளி நேரத்தில் இதற்கான அறிவிப்பை மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பாக்கப்படுகின்றது. அதனுடன் ஊழியர்களுக்கு ஜூலை மாதம் முதலான நிலுவைத் தொகையும் கிடைக்கும். இருப்பினும் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும், எப்போது அறிவிக்கப்படும் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. 

மேலும் படிக்க | 7th Pay Commission: அடி தூள்... மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டை ஜாக்பாட்!!

- உதாரணமாக, ஒரு அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ. 18,000 எனில், அவருக்கு 42% அதாவது ரூ.7,560 டிஏ தற்போது கிடைக்கிறது. அகவிலைப்படி 46 சதவிகிதம் ஆனால், இந்த தொகை மாதம் ரூ. 8,280 ஆக அதிகரிக்கும். அதன்படி ஒவ்வொரு மாதமும் சம்பளம் ரூ.720 அதிகரிக்கும்.

- ஒருவரின் சம்பளம் ரூ. 56,900 எனில், அவர் ஒவ்வொரு மாதமும் ரூ 2,276 மற்றும் ஆண்டுக்கு ரூ 27,312 பலனைப் பெறுவார்.

வீட்டு வாடகை கொடுப்பனவும் அதிகரிக்கப்படலாம்

அகவிலைப்படியுடன் வீட்டு வாடகை கொடுப்பனவும் அதிகரிக்கப்படக்கூடும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதற்கு முன், கடைசியாக எச்ஆர்ஏ ஜூலை 2021 இல் அதிகரிக்கப்பட்டது மற்றும் 25% அதிகரித்துள்ளது. இம்முறை 3 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. X வகுப்பு நகரங்களில் 3% மற்றும் Y வகுப்பு நகரங்களில் 2% மற்றும் Z வகுப்பில் 1% என எச்ஆர்ஏ -வில் அதிகரிப்பு இருக்கும் என நம்பப்படுகிறது. அரசு ஊழியரின் ஹெச்ஆர்ஏ நகரத்தின் அடிப்படையில் அதிகரிக்கப்படுவதால், அது எக்ஸ், ஒய், இசட் ஆகிய பிரிவுகளில் வைக்கப்படுகிறது. தற்போது, இசட் வகுப்பு ஊழியர்கள் 9, Y 18 மற்றும் X 27% எச்ஆர்ஏ -ஐ அவர்களின் அடிப்படை சம்பளத்தில் பெறுகின்றனர். 

அகவிலைப்படி அரியர் தொகை குறித்தும் முடிவு எடுக்கப்படலாம்

இது தவிர, நிலுவையில் உள்ள 18 மாத டிஏ அரியர் தொகை மற்றும் ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்தும் பெரிய முடிவு எடுக்கப்படலாம். ஃபிட்மென்ட் ஃபாக்டரில் அதிகரிப்பு ஏற்பட்டால் அதன் மூலம் அடிப்படை சம்பளம் 26,000 ரூபாயாக அதிகரிக்கும். இதன் மூலம் சம்பளத்தில் 49,000 ரூபாய் முதல் 96,000 ரூபாய் வரையிலான பலன் கிடைக்கும்.

மேலும் படிக்க | 7th Pay Commission:ஊழியர்களுக்கு அடிச்சது லாட்டரி.. அரியர் தொகையும் வரி விலக்கும் கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News