SBI Alert: இதற்கு QR குறியீட்டை ஸ்கேன் செய்தால், கணக்கில் மொத்த பணமும் காலியாகும்

SBI Alert: அதிகரித்து வரும் QR குறியீடு மோசடி வழக்குகளைக் கருத்தில் கொண்டு, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா) அதன் 44 கோடி வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 21, 2022, 12:55 PM IST
  • கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.
  • பணத்தைப் பெற QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டாம்.
  • ஒரு நொடியில் உங்கள் பணம் காலியாகிவிடும்.
SBI Alert: இதற்கு QR குறியீட்டை ஸ்கேன் செய்தால், கணக்கில் மொத்த பணமும் காலியாகும்  title=

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை: நாட்டில் டிஜிட்டல் மயமாக்கம் விரைவாக பரவி வருகிறது. இதனுடன் ஆன்லைன் மோசடி மற்றும் சைபர் கிரைம் பற்றிய வழக்குகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த வரிசையில், சில வருடங்களாக மொபைலின் க்யூஆர் குறியீடு மூலம் செய்யப்படும் மோசடி பற்றிய வழக்குகளும் வெளி வருகின்றன. 

அதிகரித்து வரும் QR குறியீடு மோசடி வழக்குகளைக் கருத்தில் கொண்டு, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா) அதன் 44 கோடி வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது. வாடிக்கையாளர்கள் யாரிடமிருந்தாவது QR குறியீட்டைப் பெற்றால், தவறுதலாகக் கூட அதை ஸ்கேன் செய்ய வேண்டாம் என்று வங்கி கூறியுள்ளது. இப்படிச் செய்தால், வாடிக்கையாளர்கள் மிகப்பெரிய மோசடிகளுக்கு ஆளாகக்கூடும். இந்த நிலையில் கணக்கில் இருக்கும் தொகை முழுவதையும் இழக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம். 

வங்கி தகவல் அளித்துள்ளது

எஸ்பிஐ தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை ட்வீட் மூலம் எச்சரித்துள்ளது. வங்கி தனது ட்வீட்டில், 'பணத்தைப் பெற QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டியதில்லை. ஒவ்வொரு முறையும் நீங்கள் UPI மூலம் பணம் செலுத்தும் போது பாதுகாப்பு குறிப்புகளை நினைவில் கொள்ளுங்கள்.’ என தெரிவித்துள்ளது.

QR குறியீடு மோசடி என்றால் என்ன?

QR குறியீடு எப்போதும் பணம் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது, பணம் பெறுவதற்கு அல்ல என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், பணம் பெறுதல் என்ற பெயரில் QR குறியீட்டை ஸ்கேன் செய்ய மெசேஜ் அல்லது மெயில் வந்தால், தவறுதலாக கூட அதை வாடிக்கையாளர்கள் ஸ்கேன் செய்ய வேண்டாம். இது உங்கள் கணக்கை காலி செய்து விடக்கூடும். 

கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தால் எப்போதும் பணம் கிடைக்காது என்று வங்கி தெளிவுபடுட்தியுள்ளது. ஆனால், வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக செய்தி வருகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission பம்பர் பரிசு: வட்டியில்லா முன்பணத்தை அளிக்கிறது அரசு 

இந்த பாதுகாப்பு குறிப்புகளை பின்பற்றவும்

நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய சில பாதுகாப்பு குறிப்புகளை வங்கி வழங்கியுள்ளது. ஒரு சிறு தவறு செய்தால் கூட கடினமாக உழைத்து நீங்கள் ஈட்டிய பணத்தை நீங்கள் இழக்க நேரிடலாம். 

- பணம் செலுத்தும் முன் UPI ஐடியைச் சரிபார்க்கவும்.

- UPI மூலம் பணம் செலுத்தும் போது சில பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும்.

- UPI பின் பணப் பரிமாற்றத்திற்கு மட்டுமே தேவைப்படும், பணம் பெறுவதற்கு அல்ல.

- பணம் அனுப்பும் முன் மொபைல் எண், பெயர் மற்றும் UPI ஐடி ஆகியவற்றை எப்போதும் சரிபார்க்கவும்.

- UPI பின்னை யாருடனும் பகிர வேண்டாம்.

- UPI பின்னை தவறுதலாகக் கூட மாற்றி உள்ளிட வேண்டாம். 

- நிதி பரிமாற்றத்திற்கு ஸ்கேனரை சரியாகப் பயன்படுத்தவும்.

- எந்த சூழ்நிலையிலும், உத்தியோகபூர்வ ஆதாரங்களைத் தவிர வேறு வழிகளில் தீர்வுகளை நாட வேண்டாம்.

- பணம் செலுத்துதலில் வரும் பிரச்சனைகள் மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்களுக்கு பயன்பாட்டின் உதவிப் பிரிவைப் பயன்படுத்தவும்.

- ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால், வங்கியின் குறை தீர்க்கும் போர்டலான https://crcf.sbi.co.in/ccf/ மூலம் தீர்வு காணவும்.

மேலும் படிக்க | SBI வாடிக்கையாளரா நீங்கள்? உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News