கணவனிடம் இந்த மூன்று விஷயங்களை செய்யாதீர்கள்... மனைவிகளுக்கு சில டிப்ஸ்!

Relationship News: ஒரு மனைவியாக கணவனிடம் பெண்கள் எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பது குறித்து, திருமண உறவில் நிச்சயம் கடைபிடிக்க வேண்டியது குறித்தும் இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jul 21, 2023, 01:51 PM IST
  • திருமணத்திற்கு பின் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் மாறிவிடும்.
  • இதில் இருவரும் விட்டுக்கொடுத்து வாழ்வதும் அவசியம்.
  • கணவன்-மனைவி உறவில் நம்பிக்கை மிக மிக முக்கியம்.
கணவனிடம் இந்த மூன்று விஷயங்களை செய்யாதீர்கள்... மனைவிகளுக்கு சில டிப்ஸ்! title=

Relationship News: திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆக கருதப்படுகிறது. குறிப்பாக, திருமணத்திற்கு முன் சூழ்நிலைகள் வித்தியாசமாக இருக்கும். ஒவ்வொருவரும் திருமணத்திற்குப் பிறகு தனது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆனால் சில நேரங்களில் இருவரும் அல்லது ஒருவரின் தவறு காரணமாக, திருமண வாழ்க்கை முற்றிலும் மோசமானதாகிவிடுகிறது. 

திருமணத்திற்குப் பிறகு கணவன்-மனைவி இடையே சிறுசிறு சண்டைகள் வருவது சகஜம். அதில் யார் மீதும் தவறு இருக்கலாம். ஆனால், கணவன் தவறு செய்யும் ஒவ்வொரு முறையும், மனைவியும் பல சமயங்களில் உறவைக் கெடுக்கும் இதுபோன்ற செயல்களைச் செய்வது அவசியமில்லை. ஒரு மனைவியாக கணவனிடம் பெண்கள் எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்று இதில் காணலாம். 

மனைவி இந்த பழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்:

1. எல்லாவற்றிலும் சந்தேகம்

நம்பிக்கை என்பது எந்தவொரு உறவுக்கும் வலுவான அடித்தளமாகும். மேலும் கணவன் மற்றும் மனைவிக்கு இடையிலான உறவில் இது கூடுதல் முக்கியமானது, ஏனெனில் இந்த உறவு வாழ்நாள் முழுவதும் பராமரிக்கப்பட வேண்டும். பல சமயங்களில் மனைவிக்கு கணவன் மீது சந்தேகம் வரும். ஒரு பெண் தோழி அல்லது சக ஊழியரிடம் கணவன் சாவகாசமாக பேசுவது அல்லது நண்பர்களுடன் கேலி செய்வது போன்றவை மனைவிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும். 

மேலும் படிக்க | படுக்கையறை எப்படி இருந்தால் இல்லற வாழ்க்கை சுகமாக இருக்கும்..? வாஸ்து டிப்ஸ் இதோ..!

இதற்காக, பல பெண்கள் தங்கள் கணவரின் தொலைபேசியை சரிபார்க்கிறார்கள் அல்லது அவரைப் பின்தொடரவும் தயங்குவதில்லை. கணவன் விவகாரமாக இல்லாதபோதும், இன்னும் நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள் என்றால், எங்காவது நீங்கள் கணவரின் நம்பிக்கையை அவமதிக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்த சந்தேகப் பழக்கத்தை விரைவில் கைவிட வேண்டும்.

2. அதிகமாகக் கோரிக்கை வைப்பது

திருமணத்திற்குப் பிறகு, மனைவி தனது கணவனை ஒரு ராஜாவைப் போல நடத்துகிறாள். அதாவது தனக்கு வேண்டியதை அவரிடம் கேட்டு பொற்றுக்கொள்கிறார். இது முற்றிலும் தவறு அல்ல, ஆனால் அவள் அவனிடம் அதிக விஷயங்களைக் கோரினால், அது உறவைக் கெடுக்கும். தம்பதிகளுக்கு இடையே பதற்றத்தை அதிகரிக்கும். கணவனின் நிதி வரம்பு என்ன என்பதையும், எதிர்காலப் பொறுப்பிற்காக அவர் எவ்வளவு சேமிக்கிறார் என்பதையும் நீங்கள் உணர்ந்திருக்க வேண்டும். அதற்கேற்ப செலவு செய்ய முடியும்.

3. கணவனை ஒருவருடன் ஒப்பிடுதல்

சில மனைவிகள் தங்கள் கணவனை தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அல்லது வெளியாட்களுடன் ஒப்பிடுவது அடிக்கடி பார்க்கப்படுகிறது. கணவருக்கு இந்த பழக்கம் பிடிக்காது, அது அவர்களின் சொந்த உறவில் விரிசலை உருவாக்குகிறது. மனைவியின் இந்த செயல் கணவனின் ஈகோவை புண்படுத்தும், ஏனென்றால் மனைவி அவனை வேறொரு நபருடன் ஒப்பிடுவதை ஆண்கள் விரும்புவதில்லை. ஒவ்வொரு நபரும் தனக்குள் வித்தியாசமானவர் என்பதை மனைவிகள் மனதில் கொள்ள வேண்டும், மற்றவர் எவ்வளவு நல்லவராக இருந்தாலும், உங்கள் கணவரின் இடத்தை அவரால் எடுக்க முடியாது.

மேலும் படிக்க | பெண்களின் இதயத்தில் பட்டுனு இடம்பிடிக்கனுமா... ஆண்களுக்கு இந்த 5 குணங்கள் அவசியம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News