உங்கள் குழந்தையை கணிதத்தில் கில்லியா மாத்தணுமா? ‘இந்த’ பழக்கத்தை கத்துக்கொடுங்க!

Children Mathematics Easy Tips : குழந்தைகளை கணக்கு பாடத்தில் சூரப்புலியாக மாற்ற சில வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Jul 24, 2024, 05:05 PM IST
  • குழந்தைகளை கணக்கில் புலியாக்கலாம்!
  • சில தினசரி பழக்க வழக்கங்கள் போதும்
  • அவை என்னென்ன தெரியுமா?
உங்கள் குழந்தையை கணிதத்தில் கில்லியா மாத்தணுமா? ‘இந்த’ பழக்கத்தை கத்துக்கொடுங்க! title=

Children Mathematics Easy Tips : நம்மில் பலருக்கு Maths என்ற கணக்கு பாடத்தின் ஆங்கில சொல்லை கேட்டாலே கசப்பை எடுத்து வாயில் திணித்ததை போல இருக்கும். இதற்கு காரணம் ஒன்று, நமக்கு சிறுவயதில் நமக்கு கணக்கு கற்றுக்கொடுப்பவர்கள்  “உனக்கெல்லாம் கணக்கே வராது..மக்கு மக்கு” என திட்டியிருப்பர். காரணம் ரெண்டு, அவர்கள் கூறியவை நம் மனதில் ஆழ பதிந்ததால் நமக்கு மேக்ஸ் வராது என நாமே நினைத்துக்கொண்டு இப்போது வரை அதையே சொல்லிக்கொண்டிருப்போம். 

இது மட்டுமன்றி, கணக்கு பாடத்தை கல்லூரியில் மெயின் கோர்ஸாக படிப்பவர்களை பார்த்து “இதனால என்ன பயன்? இதெல்லாமா டிகிரியா படிக்கிறீங்க?” என கேலி செய்வோம். உண்மையில் கணக்கு நமக்கு புரிந்து விட்டால் மிகவும் எளிமையானது என்பது யாருக்கும் தெரிவதில்லை. அதை சொல்லிக்கொடுக்கும் விதத்தில் சொல்லிக்கொடுத்தால், கற்றுக்கொள்ளும் விதத்தில் கற்றுக்கொண்டால், அனைத்தும் அத்துபடி ஆகிவிடும். இப்படி, கணக்கு வராத பெற்றோர்களால், தங்களின் குழந்தைக்கும் கணக்கு சொல்லிக்கொடுக்க முடியாமல் பாேகலாம். அப்படிப்பட்டவர்களுக்கான சில டிப்ஸ், இதோ.

கணிதவியலாளர் கூறும் டிப்ஸ்:

தேசிய அளவில் கணிதத்தில் 3 விருதுகளை வென்றவர் ருஷில் மதூர். கணக்கு பாடத்தை குழந்தைகளுக்கு கற்று கொடுப்பது குறித்து பேசும் அவர், அதற்கென்று சில டிப்ஸ்களையும் கொடுக்கிறார். அவை, என்னென்ன தெரியுமா?

கணிதத்தில் மகிழ்ச்சியை தேட வேண்டும்:

கணிதம் என்பது, மிகவும் சுவாரஸ்யமான மற்றும் ஆச்சரியமான பாடம் என்பதை நாம் குழந்தைகளின் மனதில் முதலில் நிறுத்த வேண்டும். கணித பாடத்தை கற்றுக்கொள்கையில், நமது மூளை திறன் வளர்ச்சி அடைகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். எனவே, இதை “மிகவும் கடினமான சப்ஜெக்ட்” என அவர்களின் மண்டையில் திணிப்பதற்கு பதிலாக அதை ஈடுபாடுடன் அவர்களை கற்றுக்கொள்ள செய்யலாம்.

மேலும் படிக்க | பெற்றோர்களுக்கான டிப்ஸ்: குழந்தைகளை காலையில் சீக்கிரம் எழ வைப்பது எப்படி?

உங்கள் அளவிற்கு மீறி...

நமக்கு பல விஷயத்தில், “உன் அளவிற்கு மீறி அதையெல்லாம் பண்ணாத..” என சொல்லிக்கொடுத்து வளர்த்திருப்பர். உண்மையில், நாம் நம் அளவிலேயே (Comfort) இருந்து கொண்டால் அதை தாண்டி வேறு எதையும் கற்றுக்கொள்ள முடியாது. எனவே, உங்கள் குழந்தை, அவர்களை அவர்களே சேலஞ்ச் செய்து கொள்ளும் அளவிற்கு கணிதத்தை பயிற்சி செய்ய வேண்டும். இது, அவர்களின் மனதையும் மூளையையும் ஒரே நிலையில் வைத்திருக்க உதவும். 

கேள்வி கேட்க வேண்டும்:

ஒரு விஷயம் புலப்பட வேண்டும் என்றால், ஏன்? எதற்கு? எங்கு? எப்படி? எதனால் போன்ற கேள்விகள் இருப்பதும், அந்த கேள்விக்கான விடைகள் இருப்பதும் மிகவும் அவசியம் ஆகும். எனவே, உங்கள் குழந்தைகள் இது போன்ற கேள்விகளை கணித பாடத்தில் இருந்து கேட்கும் போது, அதை உதாசீனப்படுத்தாமல் அந்த கேள்விக்கு முடிந்தளவு பதிலை கொடுக்க முயற்சி செய்யுங்கள். இது, அவர்களின் அறிவு வளர்ச்சிக்கு உதவும். 

சிந்தனை:

உங்கள் குழந்தைக்கு, ஒரு கணக்கில் விடை தெரியவில்லை என்றால், அதை அப்படியே விட்டுவிட நீங்கள் ஊக்குவிக்க கூடாது. முடிந்த அளவிற்கு இதற்கு என்ன பதில் வரும் என அவர்களையே யோசிக்க வைக்க வேண்டும். பின்னர் விடை கிடைத்தால் அது சரியா தவறா என்பதை ஆசிரியரிடம் சரி பார்க்க சொல்ல வேண்டும்.

மேலும் படிக்க | Parenting Tips: உங்கள் குழந்தைகளை அறிவாளியாக மாற்றுவது எப்படி? சிம்பிள் டிப்ஸ் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News