சூப்பர் செய்தி!! ஏசி கோச்களின் கட்டணம் குறைந்தது: இந்திய ரயில்வே அளித்த மாஸ் தகவல்!!

Indian Railways: இன்று முதல், ரயிலின் ஏசி 3 எகானமி கோச்சில் பயணம் செய்தால், மூன்றாம் வகுப்பு ஏசியை விட குறைவான பணம் செலுத்தினால் போதும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 22, 2023, 10:31 AM IST
  • இந்திய ரயில்வேயின் சமீபத்திய செய்தி.
  • ரயில்வே துறை எடுத்த ஒரு முக்கியமான முடிவுக்குப் பிறகு, ரயில்களின் த்ரீ டயர் ஏசி எகானமி கோச்சில் பயணம் செய்வது மலிவானதாகிவிட்டது.
  • ஏசி பெட்டிகளின் கட்டணம் தொடர்பான பழைய முறையையே அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் செய்தி!! ஏசி கோச்களின் கட்டணம் குறைந்தது: இந்திய ரயில்வே அளித்த மாஸ் தகவல்!!  title=

இந்திய ரயில்வேயின் சமீபத்திய செய்திகள்: ரயில் பயணிகளுக்கான முக்கிய செய்தி!! நீங்களும் அடிக்கடி ஏசி மூன்றாம் வகுப்பு எகானமி கோச்சில் பயணம் செய்யும் நபராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ரயில்வே துறை எடுத்த ஒரு முக்கியமான முடிவுக்குப் பிறகு, ரயில்களின் த்ரீ டயர் ஏசி எகானமி கோச்சில் பயணம் செய்வது மலிவானதாகிவிட்டது. ஏசி பெட்டிகளின் கட்டணம் தொடர்பான பழைய முறையையே அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விதி அமலுக்கு வந்த பிறகு, ஏசி 3 எகானமி கோச்சின் கட்டணம் ஏசி 3 கோச்சின் கட்டணத்தை விட குறைவாக இருக்கும். இந்த முடிவு இன்று முதல், அதாவது மார்ச் 22 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மூன்றாம் வகுப்பு ஏசியை விட குறைவாக செலுத்த வேண்டும்

இன்று முதல், ரயிலின் ஏசி 3 எகானமி கோச்சில் பயணம் செய்தால், மூன்றாம் வகுப்பு ஏசியை விட குறைவான பணம் செலுத்தினால் போதும். ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பயணிகளும் இந்த முடிவின் பலனைப் பெறுவார்கள் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆம், ஆன்லைனிலும் கவுண்டரிலும் டிக்கெட் எடுத்த பயணிகளுக்கு ரயில்வே மூலம் பணம் திருப்பி அளிக்கப்படும். தகவல்களின் படி, கடந்த ஆண்டு ரயில்வே துறையால் வர்த்தக சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இந்த சுற்றறிக்கைக்குப் பிறகு, ஏசி 3 கோச் மற்றும் ஏசி 3 எகானமி கோச்சின் கட்டணம் சமமாக்கப்பட்டது.

மேலும் படிக்க | இரவு நேர ரயிலில் பயணம் செய்கிறீர்களா... இந்த செய்தி உங்களுக்குத்தான்!

கம்பளிகள் மற்றும் போர்வைகளுக்கான வசதி தொடங்கப்பட்டது

எகானமி கோச்சில் பயணிகளுக்கு முன்பு போர்வைகள் மற்றும் கம்பளிகள் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த ஆண்டு முதல் எகானமி கோச்சின் கட்டணத்தை உயர்த்திய பிறகு, பயணிகளுக்கு போர்வைகள் மற்றும் கம்பளிகளுக்கான வசதி தொடங்கியது. இப்போது மார்ச் 21 அன்று, ஒரு சுற்றறிக்கை வெளியிட்டு, ரயில்வே பழைய முறையை மீட்டெடுக்க முடிவு செய்துள்ளது. ஏசி 3 கோச்சில் இருக்கைகளின் எண்ணிக்கை 72, ஏசி 3 எகானமி கோச்சின் பெர்த்களின் எண்ணிக்கை 80 என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏசி 3 எகானமி கோச்சின் பெர்த் ஏசி 3 கோச்சின் பெர்த்தை விட சிறியதாக இருப்பதற்கு இதுவே காரணமாகும். உண்மையில், ஏசி கோச்சில் பயணிக்க விரும்பி, ஆனால் விலை உயர்வு காரணமாக அப்படி பயணிக்க முடியாமல் போகும் பயணிகளுக்காக ஏசி 3 எகானமி கோச் ரயில்வேயால் தொடங்கப்பட்டது. உண்மையில், ஏசி 3 எகானமி கோச்சின் டிக்கெட் ஆரம்பத்தில் ஏசி 3ஐ விட குறைவாக இருந்தது. இடையில்தான் இதன் விலை அதிகரிக்கப்பட்டது. தற்போது மீண்டும் பழைய முறைமை மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஜாக்பாட்! மூத்த குடிமக்களுக்கு ரயில்வே அளித்த மாஸ் தகவல், விரைவில் இந்த வசதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News