மத்திய ஊழியர்களுக்கு ரூ.4,500 கிடைக்க, மார்ச் 31க்குள் இதை செய்யணும்

7th Pay Commission update: மத்திய ஊழியர்களுக்கு ரூ.4,500 பெற வாய்ப்பு உள்ளது. மார்ச் 31 க்கு முன் நீங்கள் ஒரு சிறிய வேலையைச் செய்தால், உங்கள் கணக்கில் எளிதாக ரூ 4,500 கிடைக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 30, 2022, 12:34 PM IST
  • ஊழியர்கள் ரூ.4500 பெற வாய்ப்பு உள்ளது
  • கொரோனா காரணமாக ஊழியர்களால் CEA ஐ கோர முடியவில்லை
  • மார்ச் 31 க்கு முன் உரிமை கோரவும்
மத்திய ஊழியர்களுக்கு ரூ.4,500 கிடைக்க, மார்ச் 31க்குள் இதை செய்யணும் title=

கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. அதிகரித்துள்ள அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவற்றைப் பெற்ற பிறகு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் இப்போது மேலும் ஒரு கொடுப்பனவைப் பெறலாம். இதுவரை, கொரோனா தொற்றுநோய் காரணமாக குழந்தைகள் கல்வி உதவித்தொகையை பெற முடியாத அனைத்து ஊழியர்களும், நாளைக்குள் இதற்கான கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.  

மார்ச் 31 ஆம் தேதிக்கு முன் சிஇஏ கிளைம் செய்ய வேண்டும்

7வது ஊதியக் குழு-வின் பரிந்துரைகளின்படி, மத்திய ஊழியர்களும் தங்கள் குழந்தைகளின் கல்விக்கான உதவித்தொகையைப் பெறுகிறார்கள். இது மாதத்திற்கு ரூ.2,250 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும்,  கடந்த ஆண்டு, கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இதன் காரணமாக மத்திய ஊழியர்கள் சிஇஏ-ஐ கோர முடியவில்லை. ஆகையால் இதை கோருவதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டது. காலக்கெடுவிற்கு முன் சிஇஏ-கிளெய்மை உருவாக்க அதன் முழுமையான செயல்முறையை அறிந்து கொள்வோம்.

குழந்தைகள் கல்வி உதவித்தொகை கோர இந்த ஆவணங்கள் தேவை

குழந்தைகள் கல்வி உதவித்தொகையைப் பெற, மத்திய அரசு ஊழியர்கள் பள்ளிச் சான்றிதழ் மற்றும் கோரிக்கை ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளியில் இருந்து பெறப்பட்ட டிக்லரேஷனில், குழந்தை அந்த பள்ளியில்தான் படிக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இதனுடன் மாணவர் எந்த ஆண்டு அங்கு படித்தார் என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கும். குழந்தைகள் கல்வி உதவித்தொகை கிளியிம் செய்ய, குழந்தையின் ரிப்போர்ட் கார்ட், சுய சான்றளிக்கப்பட்ட நகல் மற்றும் கட்டண ரசீது ஆகியவையும் இணைக்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ அதிகரிப்பு, மாத இறுதிக்குள் அறிவிப்பு?

எவ்வளவு தொகை கிடைக்கும்?

மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு குழந்தைகளின் கல்விக்கான குழந்தைகள் கல்வி உதவித்தொகை கிடைக்கிறது. ஒரு குழந்தைக்கு இந்த உதவித்தொகை மாதத்திற்கு ரூ.2250 ஆகும். அதாவது இரண்டு குழந்தைகளுக்கு மாதம் 4500 ரூபாய் என்ற அளவில் கொடுப்பனவு கிடைக்கும். இருப்பினும், இரண்டாவது குழந்தை இரட்டையராக இருந்தால், முதல் குழந்தையுடன் இரட்டையர்களின் கல்விக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இரண்டு கல்வி ஆண்டுகளின் படி, ஒரு குழந்தைக்கு 4500 ரூபாய் கிடைக்க வேண்டும். ஒரு ஊழியர் இதுவரை மார்ச் 2020 மற்றும் மார்ச் 2021 க்கான கொடுப்பனவை இன்னும் கோரவில்லை என்றால், அதை இப்போது கோரலாம். ஊழியர்கள் குழன்யைகள் கல்விக்கான இந்த கொடுப்பனவை கிளெயிம் செய்தால், அவர்களது ஊதியத்தில் ரூ.4500 சேர்க்கப்படும்.

மேலும் படிக்க | 7th pay commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி! எதிர்பார்த்த அளவு அகவிலைப்படி உயராது? காரணம்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News