அல்டேர்ணடிவ் நோபல் பரிசை வென்றார் காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்!

காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் ' மாற்று நோபல் பரிசு' என்ற நோபல் பரிசை வென்றுள்ளார்!!

Last Updated : Sep 25, 2019, 03:11 PM IST
அல்டேர்ணடிவ் நோபல் பரிசை வென்றார் காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்! title=

காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் ' மாற்று நோபல் பரிசு' என்ற நோபல் பரிசை வென்றுள்ளார்!!

ஸ்வீடனின் மாற்று நோபல் பரிசு என அழைக்கப்படும் 2019 வலது வாழ்வாதார விருதை வென்ற நான்கு பேரில் ஒருவராக ஸ்வீடன் டீனேஜ் காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் புதன்கிழமை பரிந்துரைக்கப்பட்டுள்ளார். "விஞ்ஞான உண்மைகளை பிரதிபலிக்கும் அவசர காலநிலை நடவடிக்கைக்கான அரசியல் கோரிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் பெருக்கிக் கொள்வதற்கும்" இந்த விருதை துன்பெர்க் வென்றார் என்று வலது வாழ்வாதார அறக்கட்டளை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஸ்வீடனை சேர்ந்த கிரேட்டா தன்பெர்க், பருவநிலை மாற்ற மாநாட்டின் கதாநாயகியாக மாறியுள்ளார். 16 வயதில் ஐ.நா மன்றத்தில் உரை,  நோபல் பரிசுக்கு பரிந்துரை என கால நிலை மாற்றத்திற்கான தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் கிரேட்டா தன்பெர்க். ஸ்வீடனில் தனி ஆளாக தன் போராட்டத்தை தொடங்கிய கிரேட்டா, வெள்ளிக்கிழமை மட்டும் தன் வகுப்புகளை புறக்கணித்து ஸ்வீடன் நாடாளுமன்றம் முன்பு போராடி வந்தார். அதனை தொடர்ந்து பருவநிலை மாற்றத்திற்கு உலக நாடுகளில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கால நிலை மாற்றத்திற்காக போராட Friday For Future என அனைத்து மாணவர்களையும் ஒன்றிணைந்து போராட அழைப்பு விடுத்தார்.  

சமீபத்தில் இங்கிலாந்தில் இருந்து சிறிது அளவு கூட மாசு ஏற்படுத்தாத  சோலார் படகில் அமெரிக்கா வந்தவர், நியூயார்க் நகரில் மாணவர்களை ஒன்றிணைத்து காலநிலை மாற்றத்திற்கு என்ற பெரும் போராட்டத்தை நடத்தினார். ஐ.நாவின் பருவநிலை மாநாட்டில் பேசிய கிரேட்டா இங்கு நடக்கும் அனைத்தும் தவறாக உள்ளன. நான் இங்கு இருக்கக் கூடாது, கடல் கடந்து உள்ள என் பள்ளியில் நான் மீண்டும் படித்திருக்க வேண்டும். ஆனால், என்னால் அதைச் செய்ய முடியவில்லை. 

இளைஞர்களை நம்பி எதிர்காலம் உள்ளதாகக் கூறுகிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம்? என கோபம் கலந்த கண்ணீருடன் ஆக்ரோஷமாக பேசினார். கடந்த தலைமுறை செய்த தவறுகளை இந்த தலைமுறையினர் அனுபவித்து வருகிறோம். அதிகாரத்தில் இருப்பவர்கள் பருவநிலை மாற்றம் குறித்தும் அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அழகான வார்த்தைகளை பேசி வருகிறார்களே தவிர அவர்களின் நோக்கம் வேறாக உள்ளது என விமர்சித்தார்.  

கிரேட்டாவின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் வைரலானதால் அவருக்கான ஆதரவுக்குரல் அதிகரித்து வருகிறது. இந்திய கிரிக்கெட்டர் ரோஹித் ஷர்மா, நடிகை ப்ரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் கிரேட்டாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். கிரேட்டா ஆக்ரோஷமாக பேசும் விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ட்ரம்ப், பார்ப்பதற்கு நல்ல எதிர்காலத்தை எதிர்பார்க்கும் மகிழ்ச்சியான பெண்ணாக இருக்கிறார் என கிண்டலாக பகிர்ந்துள்ளார். இதனை பலர் விமர்சித்து வருகின்றனர். ஐ.நா மன்றத்தில் ட்ரம்ப் வருகையின் போது கிரேட்டாவின் உடல்மொழி வீடியோவை பலர் சமூகவலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். 

மாறி வரும் காலநிலையில் இருந்து உயிரினங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள் என போராடும் கிரேட்டா தன்பெர்க்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மூன்று நார்வே எம்.பி.க்கள் முன்மொழிந்தனர். இந்நிலையில், கிரெட்டா துன்பெர்க் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நான்கு பரிசு பெற்றவர்களுக்கு தலா 1 மில்லியன் ஸ்வீடிஷ் கிரீடங்கள் (3 103,000) பரிசு வழங்கப்படும். 

 

Trending News