ரூ.500 நோட்டு.. ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய அப்டேட்: வழிகாட்டுதல்கள் வெளிவந்தன

RBI on Rs.500 Note: புதிய 500 நோட்டை அடையாளம் காண ரிசர்வ் வங்கி தனது வழிகாட்டுதலில் சில வழிகளை கூறியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 20, 2023, 07:43 PM IST
  • இரண்டு நோட்டுகளுக்கு ஒரே வரிசை எண் இருந்தால், அவை செல்லுபடியாகுமா?
  • இவைதான் போலி நோட்டுகளை அடையாளம் காணும் வழிகள்.
  • செல்லாத ரூபாய் நோட்டுகளை கண்டறிவது எப்படி?
ரூ.500 நோட்டு.. ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய அப்டேட்: வழிகாட்டுதல்கள் வெளிவந்தன title=

500 ரூபாய் நோட்டு, சமீபத்திய புதுப்பிப்பு: பல சமயங்களில் ஏடிஎம் -இல் பணம் எடுக்கும்போதும், சிதைந்த அல்லது பழைய நோட்டுகள் கிடைக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் மக்கள் இது குறித்து செல்லுமோ செல்லாதோ என கவலையடைகின்றனர். ஆனால் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. இது குறித்த வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. இதை பற்றி தெரிந்துகொண்டால் இதற்கான உங்கள் கவலையும் குழப்பமும் நீங்கும். 

100, 200, 500 ரூபாய் நோட்டுகள் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுகின்றன. ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நாடு முழுவதும் இந்த நோட்டுகள் குறித்து பல வகையான வைரல் மற்றும் போலியான செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. நீங்கள் பழைய அல்லது சிதைந்த நோட்டுகளை மாற்ற விரும்பினால், இப்போது இதை எளிதாக செய்யலாம். இதற்கு அருகில் உள்ள கிளையை தொடர்பு கொள்ளலாம். அங்கு நீங்கள் நோட்டுகள் மற்றும் நாணயங்களை மாற்றலாம். 

இரண்டு நோட்டுகளுக்கு ஒரே வரிசை எண் இருந்தால், அவை செல்லுபடியாகுமா?

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வங்கி நோட்டுகள் ஒரே வரிசை எண்ணைக் கொண்டிருக்கலாம் என்றும், ஆனால் அவற்றில் வெவ்வேறு உள்ளீட்டு எழுத்துக்கள் அல்லது வெவ்வேறு அச்சிடும் ஆண்டுகள் அல்லது இந்திய ரிசர்வ் வங்கியின் வெவ்வேறு கவர்னர்களின் கையெழுத்தும் இருக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி இது குறித்து கூறியுள்ளது. இன்செட் லெட்டர் என்பது ரூபாய் நோட்டின் நம்பர் பேனலில் அச்சிடப்பட்ட எழுத்தாகும். ரூபாய் நோட்டுகள் இன்செட் லெட்டர் இல்லாமலும் இருக்கலாம்.

இவைதான் போலி நோட்டுகளை அடையாளம் காணும் வழிகள்

புதிய 500 நோட்டை அடையாளம் காண ரிசர்வ் வங்கி தனது வழிகாட்டுதலில் சில வழிகளை கூறியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட 500 ரூபாய் நோட்டு போலியானது என்று ஒரு செய்தி வைரல் ஆனது. ரிசர்வ் வங்கியின் ஆளுநரின் கையெழுத்துக்கு அருகில் இல்லாமல் காந்தியடிகளின் புகைப்படத்துக்கு அருகில் பச்சை ஸ்ட்ரிப் இருக்கும் 500 ரூபாய் நோட்டு போலியானது என அந்த செய்தியில் கூறப்பட்டது. இந்த செய்தி ஒரு போலியான செய்தி என்பதை உறுதிபடுத்திய PIB, இரண்டு வகையான நோட்டுகளும் செல்லுபடியாகும் என்று ட்வீட் செய்தது. மேலும் ரிசர்வ் வங்கி (RBI) இது குறித்து ஒரு PDF ஐப் பகிர்ந்துள்ளது. இது சாதாரண குடிமகனுக்கு உண்மையான மற்றும் போலி ரூ.500 நோட்டுகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தைக் கண்டறிய உதவும்.

மேலும் படிக்க | ரிசர்வ் வங்கி எடுத்த பெரிய முடிவு: இனி வங்கிகள் அபராதம் விதிக்காது - வாடிக்கையாளர்கள் நிம்மதி

செல்லாத ரூபாய் நோட்டுகளை கண்டறிவது எப்படி? 

- நோட்டுகள் மிகவும் அழுக்காகி, அவற்றில் அதிக மண் படிந்து இருந்தால், அத்தகைய சூழ்நிலையில் அவை செல்லாத நோட்டுகளாக கருதப்படுகின்றன.

- பல நேரங்களில், நோட்டுகளை நீண்ட நேரம் பயன்படுத்துவதால், நோட்டுகள் தளர்வாக மாறும். அத்தகைய நோட்டுகள் செல்லாது. 

- விளிம்பிலிருந்து மையம் வரை கிழிந்த நோட்டுகள் செல்லாது.

- 8 சதுர மில்லிமீட்டருக்கும் அதிகமான துளைகளைக் கொண்ட நோட்டுகள் செல்லாத நோட்டுகளாக கருதப்படுகின்றன.

- நோட்டில் ஏதேனும் கிராஃபிக் மாற்றம் இருந்தால் அவை செல்லாது.

- பேனாவின் மை நோட்டில் தெளிக்கப்பட்டிருநால் அது செல்லாது.

- நோட்டின் நிறம் மங்கினால், அது செல்லாது.

- நோட்டில் டேப், க்ளூ போன்ற விஷயங்கள் இருந்தால், அத்தகைய நோட்டு செல்லாத நோட்டாக கருதப்படும். 

- நோட்டின் நிறம் மாறி இருந்தால், அத்தகைய நோட்டுகளும் செல்லாததாக கருதப்படும். 

ரிசர்வ் வங்கியின் விதி சொல்வது என்ன? 

ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய விதிகளின்படி, உங்களிடம் பழைய அல்லது சிதைந்த 500 ரூபாய் நோட்டுகள் இருந்தால், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. இப்போது வங்கியின் எந்த கிளைக்கும் சென்று அத்தகைய நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். வங்கி ஊழியர்கள் உங்கள் நோட்டை மாற்ற மறுத்தால், நீங்கள் அதைப் பற்றி புகார் செய்யலாம். நோட்டின் நிலை மோசமாக இருந்தால், அதன் மதிப்பு குறையும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்

கிழிந்த நோட்டின் ஒரு பகுதி காணாமல் போயிருந்தாலோ, அல்லது நோட்டு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட துண்டுகளாய் கிழியப்பட்டு ஒட்டப்பட்டிருந்தாலோ, அதில் எந்த முக்கிய பகுதியும் காணாமல் போகாமல் இருந்தால் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.  கரன்சி நோட்டின் சில சிறப்புப் பகுதிகளான, வெளியிடும் அதிகாரத்தின் பெயர், உத்தரவாதம் மற்றும் உறுதிமொழி விதி, கையொப்பம், அசோகத் தூண், மகாத்மா காந்தியின் படம், வாட்டர் மார்க் போன்றவையும் நோட்டில் இல்லை என்றால், உங்கள் நோட்டு மாற்றப்படாது. நீண்ட காலமாக சந்தையில் புழக்கத்தில் இருந்ததால் பயன்படுத்த முடியாத அழுக்கடைந்த நோட்டுகளையும் மாற்றிக்கொள்ளலாம்.

ரூபாய் நோட்டுகளை இப்படி மாற்றலாம்

உங்களிடம் அதிக அளவில் எரிந்த நோட்டுகளோ அல்லது ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டுள்ள நோட்டுகளோ இருந்தால், அவற்றை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் மாற்றலாம். ஆனால் வங்கி அவற்றை எடுக்காது, நீங்கள் அவற்றை ரிசர்வ் வங்கியின் வெளியீட்டு அலுவலகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். உங்கள் நோட்டுகளில் ஏற்பட்டுள்ள சேதம் உண்மையானதா அல்லது வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்டதா என்பது நிறுவனத்தால் கண்டிப்பாக சரிபார்க்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | உங்கள் உறவினர்களின் பணம் வங்கியில் இருக்கிறதா? இனி அதை எடுப்பது சுலபம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News