7th Pay Commission: ஊழியர்களுக்கு நற்செய்தி, நிதி அமைச்சகம் அளித்த தகவல்

7th Pay Commission Latest Update : மத்திய அரசு ஊழியர்களுக்கு நிதி அமைச்சகம் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 14, 2022, 06:27 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி.
  • நிதி அமைச்சகம் மூலம் செய்தி வெளியிடப்பட்டது.
  • ஜனவரி 2022 முதல் உள்ள டிஏ அரியர் தொகையும் கிடைக்கும்.
7th Pay Commission: ஊழியர்களுக்கு நற்செய்தி, நிதி அமைச்சகம் அளித்த தகவல் title=

7வது ஊதியக் குழுவின் சமீபத்திய புதுப்பிப்பு / டிஏ உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசாங்கம் ஒரு மிகப்பெரிய செய்தியை வழங்கியுள்ளது. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம் நாட்டில் உள்ள 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் பெறுவார்கள். 2022 ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

ஊழியர்களின் கணக்கில் அரியர் தொகையும் வரும் 

இது தொடர்பான அறிவிப்பை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. புதிய புதுப்பித்தலுக்குப் பிறகு, மத்திய ஊழியர்களின் மகிழ்ச்சி அதிகரித்துள்ளது. 

முன்னதாக, அகவிலைப்படியை 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக (டிஏ உயர்வு) மத்திய அரசு உயர்த்தியுள்ளது. எனினும், இந்த மகிழ்ச்சியை அதிகரிக்கும் விதமாக, தற்போது 2022 ஜனவரி முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை அமல்படுத்த நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது, இனி ஜனவரி 2022 முதல் உள்ள ஊழியர்களின் டிஏ அரியர் தொகையும் கிடைக்கும். 

மேலும் படிக்க | 7th Pay Commission பம்பர் செய்தி: HBA வட்டி விகிதங்களை குறைந்தது அரசு 

அதிகரித்த டிஏ-வின் பலனை எவ்வாறு பெறுவது

பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை சமீபத்தில் டிஏவை மூன்று சதவீதம் உயர்த்துவதாக அறிவித்தது. இதற்குப் பிறகு, டிஏ 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுடன், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் நிதியமைச்சகம் அளித்துள்ள நற்செய்தியின் பலனைப் பெறுவார்கள். உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜனவரி 1, 2022 முதல் வழங்கப்படும். 

ஒவ்வொரு மாதமும் பெறப்படும் சம்பளத்தில் விரைவில் டிஏ வழங்கப்படும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், முந்தைய மாத நிலுவைத் தொகையும் ஊழியர்களுக்கு வழங்கப்படும்.

முன்னதாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் செய்தி ஒன்று வெளியிடப்பட்டது. மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு வீடுகளை கட்டிக்கொள்ள வங்கிகளில் இருந்து எடுக்கும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை (HBA) குறைத்துள்ளது. மத்திய அரசு வீடு கட்டும் கடனுக்கான வட்டியை 7.9 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக குறைத்துள்ளது. இது குறித்து அரசு அலுவலக குறிப்பாணை வெளியிடப்பட்டது.

மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி, ஊதிய உயர்வு கனவு கலைந்தது 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News