7th Pay Commission: உறுதியானது டிஏ ஹைக், ஊதிய உயர்வின் முழு கணக்கீடு இதோ

7th Pay Commission: ஹோலி பண்டிகைக்கு முன்னதாகவே ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் உயர்வு இருக்கும். அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை மீண்டும் 4 சதவீதம் உயர்த்தக்கூடும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 4, 2023, 10:54 PM IST
  • ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டால், அவர்களின் மொத்த அகவிலைப்படி 42 சதவீதத்தை எட்டும்.
  • ஜூலை 2022 இல், அரசாங்கம் ஊழியர்களின் டிஏவை 4 சதவீதம் உயர்த்தியது.
  • டிஏ மற்றும் டிஆர் அதிகரிப்பால் 48 லட்சம் மத்திய ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.
7th Pay Commission: உறுதியானது டிஏ ஹைக், ஊதிய உயர்வின் முழு கணக்கீடு இதோ title=

7வது ஊதிய கமிஷன் டிஏ உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.  புத்தாண்டில் அகவிலைப்படி அதிகரிப்புக்காக காத்திருக்கும் ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ஹோலிக்கு முன்னதாகவே ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் உயர்வு இருக்கும். அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை மீண்டும் 4 சதவீதம் உயர்த்தக்கூடும். ஏஐசிபிஐ குறியீட்டின் தரவுகள் மூலம் இது தெரிய வந்துள்ளது.

அகவிலைப்படி இரண்டு முறை உயர்த்தப்படும்

அரசாங்கம் ஊழியர்களின் அகவிலைப்படியை ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் அதிகரிப்பு ஜனவரி மாதத்திலும், இரண்டாவது அதிகரிப்பு ஜூலை மாதத்திலும் செய்யப்படுகிறது. புத்தாண்டு தொடங்கிவிட்டது. ஆகையால், இந்த நேரத்தில் ஊழியர்கள் தங்கள் அகவிலைப்படி அதிகரிப்புக்கு காத்திருக்கிறார்கள்.

4 சதவீதம் அதிகரிக்கலாம்

இதுவரை வெளியாகியுள்ள புள்ளிவிபரங்களின்படி, இம்முறையும் அரசாங்கம் அகவிலைப்படியை 4 சதவீதம் அல்லது குறைந்தபட்சம் 3 சதவீதமாவது அதிகரிக்கும் என்பது தெளிவாகிறது. இதற்கு ஏஐசிபிஐ குறியீடு நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய இரு மாதங்களில் 0.4 புள்ளிகள் அதிகரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏஐசிபிஐ-டபிள்யூ (அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு- தொழில்துறை பணியாளர்) குறியீட்டின் தரவை, லட்சக்கணக்கான ஊழியர்களின் அகவிலைப்படியை அதிகரிப்பதற்கான அடிப்படையாக மத்திய அரசு கருதுகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: அடிப்படை ஊதியத்தில் ஏற்றம், மாத சம்பளத்தில் பம்பர் உயர்வு 

லட்சக்கணக்கான பணியாளர்கள் பயன் பெறுவர்

ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டால், அவர்களின் மொத்த அகவிலைப்படி 42 சதவீதத்தை எட்டும். ஜூலை 2022 இல், அரசாங்கம் ஊழியர்களின் டிஏவை 4 சதவீதம் உயர்த்தியது. டிஏ மற்றும் டிஆர் அதிகரிப்பால் 48 லட்சம் மத்திய ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.

அகவிலைப்படி 42 சதவீதம் உயர்த்தப்பட்டால், லெவல்-3 ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும் என்று பார்க்கலாம்: 

- ஊழியர்களின் அடிப்படை சம்பளம் - ரூ 56,900
- புதிய அகவிலைப்படி (42%) - ரூ 23,898/மாதம்
- இதுவரையிலான அகவிலைப்படி (38%) - ரூ 21,622/மாதம்
- அகவிலைப்படியில் அதிகரிப்பு - 23898-21622 = ரூ 2,276/மாதம்
- ஆண்டு ஊதிய உயர்வு - 2276X12= ரூ 27,312

ஃபிட்மென்ட் ஃபாக்டர் 

டிஏ அதிகரிப்புடன், ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்தும் ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. மத்திய அரசு புதிய ஆண்டில் டிஏ உடன் ஃபிட்மென்ட் ஃபாக்டரையும் அதிகரிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, புத்தாண்டில் ஊழியர்களுக்கு இரட்டிப்பு நற்செய்தி கிடைக்கப் போகிறது.

மேலும் படிக்க | 7th pay commission: அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய புத்தாண்டு பரிசு! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News