7th Pay Commission பம்பர் பரிசு: வட்டியில்லா முன்பணத்தை அளிக்கிறது அரசு

7th Pay Commission: ஸ்பெஷல் ஃபெஸ்டிவல் அட்வான்ஸ் ஸ்கீம் அதாவது சிறப்பு பண்டிகைக்கால முன்பணத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 22, 2022, 03:56 PM IST
  • மத்திய பணியாளர்களுக்கு முன்பணம் கிடைக்கும்.
  • இந்த முன்பணம் முன்கூட்டியே கணக்கில் இருக்கும்.
  • இதற்காக ரூ.4000-ரூ.5000 கோடி ஒதுக்கப்படலாம்.
7th Pay Commission பம்பர் பரிசு: வட்டியில்லா முன்பணத்தை அளிக்கிறது அரசு title=

7வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. இந்த ஹோலி பண்டிகையின் போது, அதாவது மார்ச் மாதத்தில், ஊழியர்கள் அதிகம் யோசிக்காமல் செலவழிக்க முடியும். ஸ்பெஷல் ஃபெஸ்டிவல் அட்வான்ஸ் ஸ்கீம் அதாவது சிறப்பு பண்டிகைக்கால முன்பணத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடும். 

அதாவது, இந்த திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஊழியர்கள், எந்த விதமான வட்டியுமின்று, அரசிடமிருந்து முன்பணமாக 10 ஆயிரம் ரூபாய் பெற முடியும். 

மத்திய பணியாளர்களுக்கு முன்பணம் கிடைக்கும்

மத்திய அரசின் அட்வான்ஸ் திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் வழங்குவதற்கு அரசு ஏற்பாடு செய்யக்கூடும் என வட்டரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது மத்திய அரசு ஊழியர்கள் ஹோலி பண்டிகையின் போது ரூ. 10,000 முன்பணமாக பெற்றுக்கொள்ளலாம். இதன் சிறப்பம்சம் என்னவென்றால். ஊழியர்கள் அதற்கு எந்த வட்டியும் செலுத்த வேண்டியதில்லை. கடந்த ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த தொகையை அறிவித்தது.

இந்த முன்பணம் ப்ரீலோடடாக இருக்கும்

பண்டிகை காலத்திற்காக வழங்கப்படும் இந்த முன்பணம் ப்ரீ லோடடாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது மத்திய ஊழியர்களின் ஏடிஎம்களில் இந்தப் பணம் ஏற்கனவே இருக்கும். பணியாளர்கள் அதை செலவு செய்தால் மட்டும் போதும். 

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் இந்த முன்பணமான ரூ.10,000-க்கு வட்டி வசூலிக்கப்படாது. மேலும், இந்த தொகை 10 தவணைகளில் திரும்ப வசூலிக்கப்படும். அதாவது, மத்திய அரசு ஊழியர்கள் வெறும் ஆயிரம் ரூபாய் என்ற மாதாந்திர தவணையிலும் இந்த முன்பண தொகையை எடுத்துக்கொள்ளலாம். 

மேலும் படிக்க | மத்திய ஊழியர்களுக்கு அதிர்ச்சி, 18 மாத DA நிலுவைத் தொகையில் மிகப்பெரிய அப்டேட்

ரூ.4000-ரூ.5000 கோடி ஒதுக்கப்படலாம்

இந்த சிறப்பு பண்டிகை முன்பண திட்டத்தின் கீழ் சுமார் ரூ.4000-5000 கோடி ஒதுக்கீடு அறிவிக்கப்படலாம். இதுமட்டுமின்றி, மாநில அரசுகளும் இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன. இது நடந்தால் சுமார் 8,000-10,000 கோடி ரூபாய் செலவாகும். 

முன்பணத் திட்டத்தின் வங்கிக் கட்டணங்களையும் அரசாங்கம் எடுத்துக்கொள்ளும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, ஊழியர்களும் இந்த முன்பணத்தை டிஜிட்டல் முறையில் மட்டுமே செலவிட முடியும்.

பயணக் கொடுப்பனவு கோரிக்கை நீட்டிப்பு

முன்னதாக மத்திய அரசு, ஊழியர்களின் விடுப்பு பயணப்படியை (எல்டிஏ) இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், மத்திய அரசு ஊழியர்கள் மார்ச் 2022 வரை வடகிழக்கு, லடாக், அந்தமான்-நிகோபார் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய இடங்களுக்குச் செல்ல லீவ் டிராவல் அலவன்ஸை (எல்டிஏ) பயன்படுத்த முடியும். லீவ் டிராவல் அலவன்ஸ் ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஊழியர்கள் எங்கு சென்றாலும் பயணப்படியை கோரலாம்.

மேலும் படிக்க | 7th Pay Commission நல்ல செய்தி: டிஏ அரியர் தொகை பற்றிய முக்கிய அப்டேட்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News