வைரல் புகைப்படம்: பவளவிழா காணும் ராயல் தம்பதியினர்!

ராயல் குடும்பத்தினர் சிறப்பு புகைப்பட தொகுப்பினையும் வெளியிட்டுள்ளனர்.

Last Updated : Nov 20, 2017, 04:13 PM IST
வைரல் புகைப்படம்: பவளவிழா காணும் ராயல் தம்பதியினர்! title=

லண்டன்: ராணி எலிசபெத் II மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோரின் 70-வது ஆண்டு திருமண நாளை இன்று கொண்டாடினர். மேலும், இவர்கள் பவளவிழா காணும் முதல் பிரிட்டன் ஆளும் தம்பதியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவினையொட்டி ராயல் குடும்பத்தினரால் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. வழக்கமாக ராயல் தம்பதியர் எந்த பொது நிகழ்ச்சிகளையும் நடத்த மாட்டார்கள், ஆனால் இவ்விழாவிற்காக இன்று மாலை, தனியார் இரவு உணவகம் ஒன்றில் வின்ட்சர் கோட்டை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சிற்ப்பு விருந்தினில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இவ்விழாவினை முன்னிட்டு, ராயல் குடும்பத்தினர் சிறப்பு புகைப்பட தொகுப்பினையும் வெளியிட்டுள்ளனர்.

தற்போது இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது!

Trending News