IPL_2018: சென்னையை வீழ்த்தி மும்பை அணி வெற்றி

IPL 2018 தொடரின் 27-வது போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் புனே மைதானத்தில் நேற்று மோதின.

Last Updated : Apr 29, 2018, 08:19 AM IST
IPL_2018:  சென்னையை வீழ்த்தி மும்பை அணி வெற்றி title=

IPL 2018 தொடரின் 27-வது போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் புனே மைதானத்தில் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது.

சென்னை அணி:-

அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஷேன் வாட்சன் 12 ரன்களில் அவுட்டானார். ரய்னா ராயுடுவுடன் ஜோடி சேர்ந்து 71 ரன்கள் சேர்த்த நிலையில் ராயுடு 46 ரன்களில் அவுட்டானார். அடுத்து தோனி 26 ரன்களில் வெளியேறினார்.

இறுதியில், சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. இதில் ரய்னா 75 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.

மும்பை அணி:-

170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. முதலில் சூர்யகுமார் யாதவும், எவின் லெவிசும் களமிறங்கினர். இவர்கள் இருவரும் பவர் பிளேயில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் எடுத்தனர். 

சூர்யகுமார் யாதவ் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ரோகித் சர்மா களம் இறங்கினார். மும்பை அணி 15 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்திருந்தது. 

லெவிஸ் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவரை தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா களமிறங்கினார். ரோகித் சர்மா 56 ரன்களுடனும், பாண்ட்யா 16 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.

இறுதியில், மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Trending News