பட்சிலம் குழந்தைக்கு நடந்த பாலியல் வன்கொடுமை!!

டெல்லியில் 8 மாத பெண் குழந்தையை 28 வயது இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம்.

Last Updated : Jan 30, 2018, 12:47 PM IST
பட்சிலம் குழந்தைக்கு நடந்த பாலியல் வன்கொடுமை!! title=

டெல்லி: ஷகுர்பஸ்தி பகுதியில் கூலித்தொழிலாளியின் 8 மாத கைக்குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடூரம்.  

எட்டு மாத குழந்தையின் பெறோர் கூலி தொழிலாளிகள். அவரின் தந்தை கூலி வேலை செய்கிறார். குழந்தையின் தாயார் பணிப்பெண் வேலை செய்கிறார். இவர்கள் தனது கைக்குழந்தையை அருகாமையில் உள்ள வீட்டில் கவனித்துக்கொள்ளுமாறு ஒப்படைத்து சென்றிருக்கின்றனர். 

அந்த வீட்டில் இருந்த 28 வயது இளைஞர், முதலில் குழந்தையை வைத்து விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். பின்னர் வீட்டின் மொட்டை மாடிக்கு குழந்தையை தூக்கிச் சென்ற அந்த இளைஞர் 8 மாத குழந்தை என்றும் கூட பாராமல் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருக்கிறார்.

குழந்தையின் தாய் வேலையை முடித்துவிட்டு, அந்த வீட்டில் சென்று குழந்தையை பெற சென்றிருக்கிறார். அப்போது குழந்தை இரத்தம் வெள்ளத்தில் ஆபத்தான நிலையில்இருந்திருக்கிறது. பதறிப்போன தாய் உடனடியாக குழந்தையை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். 

முதலில் குழந்தையை தான் ஒன்றுமே செய்யவில்லை என மறுத்த அந்த இளைஞர் சிறிது நேரத்திலேயே வீட்டை விட்டு ஓடியிருக்கிறார். பின்னர் போலீசார் அவரை கைது செய்து விசாரித்ததில், குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டார்.

 

 

Trending News