கரன்சி விவகாரம் மோடி மீது ராகுல் தாக்கு

ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக  ராகுல் காந்தி பிவாண்டி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

Last Updated : Nov 16, 2016, 12:50 PM IST
கரன்சி விவகாரம் மோடி மீது ராகுல் தாக்கு title=

மும்பை: ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக  ராகுல் காந்தி பிவாண்டி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது மராட்டிய மாநிலம், பிவாண்டி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்தான் மகாத்மா காந்தியை கொன்றார்கள் என்று அவதூறாக பேசியதாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த ஒருவர் பிவான்டி நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்திருந்தார்.

இவ்வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு பிவான்டி நீதிமன்றம் அடுத்தடுத்து சம்மன்களை அனுப்பியது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வின்முன் விசாரணைக்கு வந்தது.காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு என்று தான் கூறவில்லை, கொன்றவர் அந்த அமைப்புடன் தொடர்புடையவர் என்றுதான் கூறினேன் என்று ராகுல் காந்தி முன்னர் மும்பை உயர் நீதிமன்றத்தில் கூறியதை இறுதியான, பதிவு செய்யக்கூடிய வாக்குமூலமாக புகார் அளித்தவர்கள் ஏற்றுக் கொண்டால் சம்மன்களை ரத்து செய்வோம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இந்நிலையில், பிவான்டி கோர்ட்டில் தொடரப்பட்டுள்ள வழக்கில் ராகுல் காந்தி இன்று நேரில் ஆஜரானார். இதனையடுத்து, அவருக்கு பிவாண்டி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருக்கிறது.

கோர்ட் வளாகத்தைவிட்டு வெளியேவந்த ராகுல் காந்தி, பிவான்டி நகரில் காங்கிரஸ் தொண்டர்களிடையே நடைபெற்றுவரும்.பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பேசிய ராகுல், ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதால் இந்தியாவே கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறது. எந்த வங்கி வாசலிலும் நிற்கும் வரிசையில் பணக்காரர்கள் நிற்கவில்லை. ஏழை மக்கள் தான் நிற்கிறார்கள்.

அவரது தொழிலதிபர் நண்பர்களிடம் இதுவரை எந்த விசாரணையோ, நடவடிக்கையோ இல்லை. உங்களிடம் உள்ள பணத்தை பறித்து செல்வந்தர்களிடம் கொடுக்க மோடி முயற்சி செய்கிறார். தொழிலதிபர்கள் 15 பேருக்காக ஆட்சி நடத்துகிறார் மோடி என்று ராகுல் தாக்கினார்.

Trending News