மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்!

மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Last Updated : Nov 12, 2018, 10:36 AM IST
மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்! title=

மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் அனந்தகுமார்  உடல்நலக்குறைவால் காலமானார். அனந்தகுமாரின் உடல், குடும்பத்தினர் அஞ்சலிக்காக லால்பக் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. மத்திய அமைச்சர் அனந்த குமார் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

 

மத்திய பாஜக அரசில் ரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்து வருபவர் அனந்தகுமார் (59). கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இவர் பெங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பெங்களூரு தெற்கு தொகுதியில் 6 முறை வெற்றி பெற்றுள்ளார். 

இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு  புற்றுநோயால் அவதிப்பட்டு இருந்தார்.  அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற இவர், பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் அனந்த குமார் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்:- 

 

 

பிரதமர் நரேந்திர மோடி:- 

 

 

 

 

 

 

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்:- 

 

 

 

 

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா:-

 

 

 

 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி:-

 

 

கர்நாடக முதல்வர் குமாரசாமி:-

 

 

உள்பட பலர் அனந்தகுமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். 

Trending News