கொல்கத்தா கொடூரம்; கணவரின் இரண்டு காதினையும் வெட்டிய மனைவி!

மற்றொரு அதிர்ச்சி சம்பவத்தில் கொல்கத்தாவை சேர்ந்த பெண்மனி தன் கணவரின் காதுகளை வெட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

Last Updated : Jul 18, 2018, 04:43 PM IST
கொல்கத்தா கொடூரம்; கணவரின் இரண்டு காதினையும் வெட்டிய மனைவி! title=

மற்றொரு அதிர்ச்சி சம்பவத்தில் கொல்கத்தாவை சேர்ந்த பெண்மனி தன் கணவரின் காதுகளை வெட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

கொல்கத்தாவின் நெர்காலாந்து பகுதியை சேர்ந்தவர் தன்வீர்(20), இவரது மனைவி மும்தாஜ்(40). தன்னை விட 20 வயது இளையவரான தன்வீரை மணந்துக்கொண்ட மும்தாஜ் தொடர்ந்து தன் கணவரை கொடுமை படுத்தி வந்துள்ளார். இதன் உச்சக்கட்டமாக கடந்த செவ்வாய் அன்று தன்வீரை துப்பாக்கி முனையில் வைத்து அவரது காதுகளை வெட்டியுள்ளனர்.

இந்த நிகழ்வின் போது மும்தாஜ்-க்கு அவரது சகோதரியும் உதவியுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறித்து வந்த தன்வீரின் குடும்பத்தார், அவரை அருகில் இருந்த மருத்தவமனையில் சிகிச்சைக்காக கொண்டுச்சென்றுள்ளனர். பின்னர் இச்சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் மும்தாஜினை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு தன் நண்பர் ஒருவரின் கட்டாயத்தின் பேரில் மும்தாஜினை தன்வீர் மணந்துள்ளார். அந்நாள் முதலே தன்வீரை மும்தாஜ் கொடுமை படுத்திவந்துள்ளார். இந்த கொடுமையில் இருந்து தப்பிக்க பல முறை முயன்றும் மீண்டும் மீண்டும் மும்தாஜ் தன்வீரை மீட்டுவந்துள்ளார்.

இறுதியாக சம்பவத்தன்று தன்வீரை கொலை செய்ய முடிவு செய்த மும்தாஜ், அவரை துப்பாக்கி முனையில் துன்புறுத்தியபோது அவரிடன் இருந்து தப்பியுள்ளார்.

தற்போது மும்தாஜ் காவலர் பிடியில் இருந்து தப்பிக்க தலைமறைவாக இருப்பதாகவும் தெரிகிறது.

Trending News