ஜம்மு மற்றும் காஷ்மீர்: பாரமுல்லாவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை...

ஜம்முவில் பாரமுல்லாவின் சோபோர் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 13, 2018, 12:05 PM IST
ஜம்மு மற்றும் காஷ்மீர்: பாரமுல்லாவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை... title=

ஜம்முவில் பாரமுல்லாவின் சோபோர் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்! 

ஜம்மு&காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபோர் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த ரகசிய தகவலின் பேரில், அப்பகுதிக்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் சோபோர் பகுதியை சுற்றி வளைத்தனர். 

அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, பாதுகாப்புப்படையினரும் பதிலடி கொடுத்துள்ளனர், சுமார் 3 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மேலும் அங்கு தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

 

Trending News