மனைவி உடலுறவுக்கு மறுத்ததால் ஆணுறுப்பை வெட்டிகொண்ட கணவர்!

உடலுறவுக்கு மறுத்த மனைவியை கொலை செய்து, தனது ஆணுறுப்பையும் வெட்டிகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!

Last Updated : Jul 8, 2019, 01:49 PM IST
மனைவி உடலுறவுக்கு மறுத்ததால் ஆணுறுப்பை வெட்டிகொண்ட கணவர்! title=

உடலுறவுக்கு மறுத்த மனைவியை கொலை செய்து, தனது ஆணுறுப்பையும் வெட்டிகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!

இந்த பறந்து விரிந்த உலகில் பல விசித்திரமான நிகழ்வுகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றனர். அதில், சில சம்பவம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும், இன்னும் சில சிரிப்பில் ஆழ்த்தும். அந்தவகையில், உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் பகுதியை சேர்ந்தவர் அன்வருல் ஹாசன். இவருக்கு திருமணம் ஆகி ஓராண்டு ஆகிய நிலையில், இவர் குஜராத் மாநிலம் சூரத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், அன்வருல் அடிக்கடி தனது வீட்டுக்கு வந்து செல்வார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் வீட்டுக்கு வந்தவர் தனது மனைவி மெக்னாசை கொலை செய்ததுடன், அவரது ஆணுறுப்பையும் அவர் அறுத்துள்ளார்.

இதையடுத்து, அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது, இருவரும் ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில்; சம்பவத்தன்று அன்வருல் தனது மனைவியை உடலுறவுக்கு அழைத்துள்ளார். இதற்கு அவரது மனைவி மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கோவமடைந்த அன்வருல் தனது மனைவியை கொலை செய்ததாகவும், பின்னர் தனது ஆணுறுப்பையும் வெட்டிக்கொண்டதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அவரை உடனே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக காலவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், அன்வருல் வரதட்சணை கேட்டு அடிக்கடி தனது மகளை துன்புறுத்தி வந்ததாக அவரது மாமனார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகிறது.

 

Trending News