இளைஞர்களே...! இந்திய ராணுவத்தில் இணைவதற்கு ஒரு வாய்ப்பு..!

ஹரியானா, ரோஹ்தக், ஜஜ்ஜார், சோனேபட், மற்றும் பானிபட் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்காக, இந்திய ராணுவம் பிப்ரவரி 10 முதல் 20 வரை ரோஹ்தக்கில் ஆட்சேர்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்படும்.

Last Updated : Jan 2, 2020, 01:17 PM IST
இளைஞர்களே...! இந்திய ராணுவத்தில் இணைவதற்கு ஒரு வாய்ப்பு..! title=

ஹரியானா, ரோஹ்தக், ஜஜ்ஜார், சோனேபட், மற்றும் பானிபட் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்காக, இந்திய ராணுவம் பிப்ரவரி 10 முதல் 20 வரை ரோஹ்தக்கில் ஆட்சேர்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்படும்.

ரோஹ்தக்கில் உள்ள ராஜீவ் காந்தி விளையாட்டு வளாகத்தில் இந்த ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறும் என்று ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த ஆட்சேர்ப்பு முகாமில் ரோஜ்தாக் உடன் ஜஜ்ஜர், சோனிபட் மற்றும் பானிபட் ஆகிய மூன்று மாவட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன, என தனது செய்திகுறிப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது., "ஆட்சேர்ப்பு பணியில் பங்கேற்க வேட்பாளர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டியது அவசியம். 2020 ஜனவரி 25-ஆம் தேதிக்குள் ஆன்லைன் பதிவு செய்ய முடியும் என்றும், ஜனவரி 26 முதல் மின்னஞ்சல் மூலம் பதிவு செய்யப்பட்ட சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுக்கு அட்மிட் கார்டுகள் அனுப்பப்படும்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அட்மிட் கார்டில் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் வேட்பாளர்கள் ஆட்சேர்ப்பு தளத்தை அடைவது கட்டாயமாகும் என்று செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

"இராணுவத்தில் ஆட்சேர்ப்பு இலவசம், நியாயமான மற்றும் முற்றிலும் தகுதி அடிப்படையிலானதாக இருக்கும், மேலும் எந்தவொரு இடைத்தரகரும் இராணுவத்தில் வேட்பாளர்களை அனுமதிக்க முடியாது. ஆட்சேர்ப்பு செயல்முறை முழுமையாக கணினிமயமாக்கப்பட்டுள்ளது," என்றும் செய்தித் தொடர்பாளர் தனது செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Trending News